அமெரிக்க எண்ணெய் கப்பலை தாக்கிய ஈரான்
ஈரானிய போர்க்கப்பலை அமெரிக்கா தகையதற்கு பதிலடியாக, அமெரிக்க எண்ணெய் கப்பலொன்றின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.
ஈரான் புரட்சிகர காவல்படை (IRGC) வியாழக்கிழமை, பாரசீக வளைகுடாவின் வடக்கு பகுதியில் அமெரிக்க எண்ணெய் கப்பலை தாக்கியதாக அறிவித்துள்ளது.
இந்த தாக்குதல், புதன்கிழமையன்று இலங்கை கடல் எல்லைக்கு அருகே அமெரிக்க நீர்மூழகி கப்பல் ஈரானின் IRIS Dena போர்க்கப்பலை torpedo-வால் தாக்கி மூழகடித்த சில மணிநேரங்களுக்கு பிறகு நடந்துள்ளது.

அந்த தாக்குதலில், 87 ஈரான் கடற்படையினர் உயிரிழந்ததாகவும், 32 பேர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், இன்னும் 60 பேர் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு அமெரிக்கா கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என ஈரான் வெளிவிவகார அமைச்சர் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லும் கப்பல்கள் அனைத்து தங்களது கட்டுப்பாட்டில் இருக்கும் என IRGC எச்சரித்துள்ளது.
இந்த சம்பவம், அமெரிக்கா-இஸ்ரேல்-ஈரான் இடையிலான போரை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களில், அமெரிக்கா ஈரான் கடற்படையை குறிவைத்து பல தாக்குதல்களை நடத்தியுள்ளது. அதற்கு பதிலாக, ஈரான் ட்ரோன் மற்றும் ஏவுகணைகளைக் கொண்டு தாக்குதல்களை மேற்கொண்டுவருகிறது.
இந்த மோதல்கள், தற்போது இந்தியப் பெருங்கடல் மற்றும் தெற்காசிய பகுதிகளில் அமைதியை பாதித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Iran hits US tanker, Persian Gulf conflict, IRIS Dena warship attack, Indian Ocean war tensions, Iran Israel US war escalation #IranUSConflict #GulfWar #USNavy #IRISDena #IndianOcean