காஸா மீதான தாக்குதலை தீவிரப்படுத்தினால் மத்தியதரைக் கடல் வழி மூடப்படும்., மிரட்டும் ஈரான்
காஸா மீது இஸ்ரேல் கடும் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், மத்திய தரைக்கடல் பகுதியை மூடப்போவதாக ஈரான் மிரட்டல் விடுத்துள்ளது.
அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் காஸாவில் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டால் மத்தியதரைக் கடல் மூடப்பட வேண்டும் என்று ஈரானின் புரட்சிகர காவலர்களின் Brigadier General Mohammad Reza Naqdi கூறியதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆனால் இது எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பதை அவர் குறிப்பிடவில்லை.
மத்தியதரைக் கடலுக்கு ஈரானுக்கு நேரடி அணுகல் இல்லை. எனவே, மத்தியதரைக் கடல் வழியை ஈரான் எவ்வாறு மூடும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
மத்தியதரைக் கடல் பகுதியில் ஈரானிய ஆதரவு பெற்ற குழுக்கள் லெபனானில் உள்ள ஹெஸ்புல்லா மற்றும் சிரியாவில் உள்ள கூட்டணி மட்டுமே உள்ளது.
காசாவில் இஸ்ரேலுடன் போரிட்டு வரும் ஹமாஸ் அமைப்பிற்கு ஈரான் ஆதரவு அளித்து வருகிறது.
காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு அமெரிக்காவே காரணம் என ஈரான் குற்றம்சாட்டியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Iran Threatens Mediterranean Closure Over Gaza war, Israel Hamas war, Iran Supports Palestine, Iran Supports Hamas