யுரேனியத்தை கையளிக்க தயாராகும் ஈரான்., அமைதி ஒப்பந்தம் நோக்கி முன்னேற்றம்
அமெரிக்காவுடன் நடைபெறும் பேச்சுவார்த்தைகளில், ஈரான் தனது செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை (Enriched Uranium) கையளிக்கத் தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த ஒப்பந்தம், ஹார்முஸ் நீரிணை வழியாக எண்ணெய் போக்குவரத்து மீண்டும் சீராக நடைபெறவும், பிராந்தியத்தில் அமைதி நிலை பெறவும் முக்கியமான முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.
அமெரிக்க அதிகாரிகள், பேச்சுவார்த்தையின் முதல் கட்டமாகவே யுரேனியம் கையளிப்பு இடம்பெற வேண்டும் என வலியுறுத்தினர்.
ஆரம்பத்தில் இதற்கு எதிரிப்பு தெரிவித்திருந்த ஈரான், அமெரிக்கா மீண்டும் இராணுவ நடவடிக்கைகளை தொடங்கும் எச்சரிக்கையையடுத்து, ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

ஈரான் தற்போது 970 பவுண்டு யுரேனியம் வைத்திருப்பதாகவும், அது 60 சதவீதம் வரை செறிவூட்டப்பட்டுள்ளதாகவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இது, மேலும் செறிவூட்டப்பட்டால் பல அணு ஆயுதங்களை உருவாக்கக்கூடிய அளவாக இருக்கும்.
இந்த யுரேனியத்தை ரஷ்யாவிற்கு மாற்றுவது அல்லது குறைந்த அளவு செறிவூட்டப்பட்ட நிலையில் மாற்றுவது போன்ற விருப்பங்களும் பரிசீலனையில் உள்ளன. 2015-ஆம் ஆண்டு ஒபாமா காலத்தில் நடந்த அணு ஒப்பந்தத்தைப் போல, ரஷ்யாவிற்கு மாற்றும் வாய்ப்பும் உள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், “இது அமைதிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்” என்று கூறியுள்ளார்.
ஈரான் வெளிவிவகார அமைச்சகம், இது ஒரு ‘framework agreement’ என தெரிவித்துள்ளது.
இந்த முன்னேற்றம், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அணு ஆயுத அச்சுறுத்தலைக் குறைத்து, உலகளாவிய எண்ணெய் சந்தையை நிலைப்படுத்தும் வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
#IranDeal #Uranium #Trump #USIran #PeaceTalks #StraitOfHormuz #NuclearNegotiations #Geopolitics