அமெரிக்க போர் விமானங்களுக்கு புதிய அச்சுறுத்தல்: சீனாவின் MANPAD ஏவுகணைகள்
ஈரானில் அமெரிக்கா நடத்தும் விமானப் போருக்கு புதிய சவாலாக MANPAD எனப்படும் தோளில் சுமந்து செலுத்தும் ஏவுகணைகள் உருவாகியுள்ளன.
ஏப்ரல் 3 அன்று, ஈரான் அமெரிக்காவின் F-15E Strike Eagle மற்றும் A-10 Warthog விமானங்களை சுட்டு வீழ்த்தியது.
மேலும், KC-135 Stratotanker எனும் ஐந்து எரிபொருள் நிரப்பும் விமானங்கள் மற்றும் E-3 Sentry எனும் ரேடார் விமானமும் தாக்குதலில் சேதமடைந்தன. ஒரு F-35 Lightning எனும் ஸ்டெல்த் ஜெட் கூட ஈரானின் தரைத் தாக்குதலில் பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில், சீனாவிலிருந்து 1,000-க்கும் மேற்பட்ட MANPAD ஏவுகணைகள் ஈரானுக்கு வரப்போகின்றன என்ற தகவல் அமெரிக்க உளவுத்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.

சீனா இதை மறுத்தாலும், ஈரான் ஏற்கனவே சீனாவின் செயற்கைக்கோள் மற்றும் தொழில்நுட்ப உதவியைப் பயன்படுத்தி அமெரிக்க தளங்களை குறிவைத்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.
MANPAD ஏவுகணைகள், ஒரு வீரர் தோளில் சுமந்து இயக்கக்கூடிய, வெப்பத்தை அடையாளம் காணும் குறைந்த செலவிலான ஆயுதமாகும்.
இதனை எளிதில் மறைத்து வைக்கலாம், வேகமாக ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லலாம், குறைந்த உயரத்தில் பறக்கும் விமானங்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இந்த ஆயுதம் பார்க்கப்படுகிறது..
அமெரிக்கா தரைத் தாக்குதலுக்கு படைகளை அனுப்பும் சூழலில், இந்த ஆயுதங்கள் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |