சொந்த நிலத்தில் அடக்கம் செய்ய முடியாமல் லெபனான் மக்கள்- இஸ்ரேல் தொடர் தாக்குதல்
லெபனானில், உயிரிழந்தவர்களை தங்கள் சொந்த ஊரில் அடக்கம் செய்ய முடியாத நிலையில் உள்ளனர்.
தொடர்ந்து நடைபெறும் இஸ்ரேலின் தாக்குதலால், உயிரிழந்த உறவுகளை தங்கள் சொந்த ஊரில், பூர்விக நிலங்களில் அடக்கம் செய்ய முடியாமல் பல குடும்பங்கள் துயரத்தில் உள்ளனர்.
ஏப்ரல் 8 பெய்ரூட்டில் நடந்த தாக்குதலில், அலி சப்பாக் மற்றும் வேல் சப்பாக் சகோதரர்கள், தங்கள் தாய், மற்றொரு சகோதரர் மற்றும் உதவியாளரை பறிகொடுத்தனர்.
அவர்களின் உடல்களை சொந்த ஊரான நபாத்தியில் உள்ள குடும்ப கல்லறையில் அடக்கம் செய்ய விரும்பினாலும், அங்கு தினசரி தாக்குதல் நடப்பதால் அது சாத்தியமாக்கவில்லை.

"எங்கள் தாயும் சகோதரரும் குடும்ப கல்லறையில் அடக்கம் செய்யப்பட வேண்டும். அனால், தற்போது அது சாத்தியமில்லை. நூற்றுக்கணக்கான குடும்பங்கள் இதே துயரத்தை அனுபவித்து வருகின்றனர்" என்று சப்பாக் குடும்பம் தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் ஹிஸ்புல்லா மற்றும் இஸ்ரேல் இடையே போர் வெடித்ததிலிருந்து, 2,160 பேருக்கு மேல் உயிரிழந்துள்ளனர். மேலும் 12 லட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
பெய்ரூட்டில் மட்டும் கடந்த வாரம் 350 பேர் உயிரிழந்தனர்.

இஸ்ரேல், தெற்கு லெபனானில் 30 கி.மீ. வரை பாதுகாப்புப் பகுதி அமைப்பதாகவும், ஹிஸ்புல்லாவை குறிவைத்து தாக்குதல்கள் நடத்துவதாகவும் தெரிவித்துள்ளது. ஆனால், பொதுமக்கள் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.
இந்த தாக்குதல்கள், லெபனானியர்களின் வாழ்வில் நீண்டகாலம் ஆறாத துயரத்தை உருவாக்கியுள்ளன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
#IsraelLebanonWar #LebanonCrisis #BeirutStrikes #HezbollahConflict #MiddleEastNews #HumanRights