ஈரானின் அணு நிலையம் மீது மீண்டும் தாக்குதல் நடத்திய இஸ்ரேல், அமெரிக்கா
மத்திய கிழக்கீழ் நடைபெறும் போர் நான்காவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், ஈரானின் முக்கியமான அணு நிலையம் மீது வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானின் நாடான்ஸ் (Natanz) யுரேனியம் செறிவூட்டு நிலையத்தை மீண்டும் தாக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தாக்குதல் நடத்தப்பட்டாலும், கதிர்வீச்சு கசிவு எதுவும் இல்லை என ஈரானின் Mizan செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த அணு நிலையம் ஏற்கெனவே தாக்குதலுக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது. செயற்கைகோள் படங்களில் பல கட்டிடங்கள் சேதமடைந்து காணப்பட்டன.

ஆனால் அப்போதும், தாக்குதலால் எந்த கதிர்வீச்சு விளைவுகளும் இல்லை என ஐ.நா. அணு கண்காணிப்பு அமைப்பு தெரிவித்திருந்தது.
தாக்குதல்கள் ஈரானில் மட்டுமல்லாமல், அப்பகுதி முழுவதும் பரவியுள்ளன. தெஹ்ரானில் இரவு முழுவதும் கடுமையான வான்வழி தாக்குதல்கள் நடந்ததாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள உளவுத்துறை தலைமையகம் ட்ரோன் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு அதிகாரி உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேலில், ஈரான் ஏவிய ஏவுகணையின் சிதைவுகள் ஒரு காலியாக இருந்த பாடசாலையில் விழுந்தன. அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் எதுவும் இல்லை.
அமெரிக்கா தனது இராணுவ நடவடிக்கைகளை குறைக்கலாம் என ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் கூறியிருந்தாலும், அதே நேரத்தில் மத்திய கிழக்கில் கூடுதல் படைகளை அனுப்பியுள்ளது. இதனால் அமெரிக்காவின் திட்டம் குழப்பமாக உள்ளது.
இந்நிலையில், இஸ்ரேல் ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது. போர் தீவிரமடைந்து, பிராந்தியத்தின் நிலைமை மேலும் சிக்கலாகியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |