அன்பளிப்பாக 220,000 டன் கோதுமையை ஏற்றுமதி செய்யவிருக்கும் ஈராக்
220,000 டன் கோதுமையை சிரியாவிற்கு ஈராக் பரிசாக அனுப்பும் என்று சிரிய ஊடகங்கள் வெள்ளிக்கிழமை தகவல் வெளியிட்டுள்ளன.
அதிகார மாற்றத்திற்குப் பிறகு
இதில் முதல் தொகுப்பு ஏற்கனவே சிரியாவின் டெய்ர் எல்-சோர் துறைமுகத்திற்கு வந்து சேர்ந்துள்ளதாகவும் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
மார்ச் 25 அன்று அறிவிக்கப்பட்ட முந்தைய டெண்டரில் சிரியா சுமார் 100,000 டன் கோதுமையை வாங்கியது. கடந்த ஆண்டு இறுதியில் சிரியாவில் அதிகார மாற்றத்திற்குப் பிறகு நடந்த முதல் பெரிய கொள்முதல் டெண்டர் இது என்று நம்பப்படுகிறது.
இந்த நிலையில், கோதுமை மற்றும் பிற அடிப்படைப் பொருட்களின் இறக்குமதி அமெரிக்க மற்றும் ஐ.நா.வின் தடைகளுக்கு உட்பட்டது அல்ல என்று சிரியாவின் புதிய அரசாங்கத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், வர்த்தக ஒப்பந்தங்களுக்கு நிதியளிப்பதில் உள்ள சவால்கள், உலகளாவிய சப்ளையர்கள் சிரியாவிற்கு விற்பனை செய்வதைத் தடுத்து வருவதாக கூறப்படுகிறது.
ரஷ்யா மற்றும் ஈரான்
டிசம்பர் மாதம் கிளர்ச்சியாளர்களால் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி பஷார் அல்-அசாத்தின் முக்கிய ஆதரவாளர்களான ரஷ்யா மற்றும் ஈரான் நாடுகள் முன்பு சிரியாவின் பெரும்பாலான கோதுமை மற்றும் எண்ணெய் பொருட்களை வழங்கியது.
ஆனால் கிளர்ச்சியாளர்கள் குழுக்கள் வெற்றி பெற்ற நிலையில் அல்-அசாத் ரஷ்யாவிற்கு தப்பிச் சென்ற பிறகு நிறுத்தப்பட்டது. இதனிடையே, சிரியாவின் லடாகியா துறைமுகத்திற்கு கோதுமையுடன் கப்பல் ஒன்று வந்தடைந்துள்ளது, அல்-அசாத் கிளர்ச்சியாளர்களால் பதவி நீக்கம் செய்யப்பட்ட பின்னர் இதுபோன்ற முதல் விநியோகம் இதுவாகும் என்று அரசாங்கம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |