கனடா, பிரான்ஸ், அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளை 'குவாரன்டைன்' பட்டியலில் சேர்த்த பிரபல நாடு!
பிரபல ஐரோப்பிய நாடான அயர்லாந்து அதிகரித்துவரும் கொரோனா தொற்று காரணமாக அமெரிக்கா, கனடா, பெல்ஜியம், பிரான்ஸ் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளை கட்டாய ஹோட்டல் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தும் நாடுகளின் பட்டியலில் சேர்த்தது.
COVID-19 பரவுவதை நிறுத்த சில கடினமான பயண கட்டுப்பாடுகளை அயர்லாந்து அரசு கடுமையாக்கியுள்ளது.
எந்த நாடுகளிலிருந்தும் அயர்லாந்துக்கு வரும் பயணிகள் அடுத்த ஐந்து நாட்களுக்குள் ஒரு கோவிட் -19 சோதனையை முன்பதிவு செய்திருக்க வேண்டும்.
அதேபோல், அவர்கள் அயர்லாந்தில் தரையிறங்கும் போது பயணம் செய்வதற்கு முந்தைய நாட்களில் எடுக்கப்பட்ட ஒரு சோதனை முடிவையும் கையில் வைத்திருக்க வேண்டும் என அயர்லாந்தின் சுகாதார அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும், ஆர்மீனியா, பங்களாதேஷ், பெர்முடா, போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா, குராக்கோ, கென்யா, லக்சம்பர்க், மாலத்தீவுகள், பாகிஸ்தான், துருக்கி மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளையும் இந்த கட்டாய ஹோட்டல் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தும் நாடுகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.