பிழையான இந்திய நாட்டு வரைபடம் - மன்னிப்பு கேட்ட இஸ்ரேல் இராணுவம்
பிழையான இந்திய வரைபடத்தை வெளியிட்டதற்காக இஸ்ரேல் இராணுவம் மன்னிப்பு கேட்டுள்ளது.
பாகிஸ்தானுக்கு ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதிகளை காட்டும் தவறான இந்திய வரைபடம் ஒன்றை X தளத்தில் பகிர்ந்ததற்காக, இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுள்ளது. இது இந்தியாவை மிகவும் கோபப்பட வைத்தது.
இந்த தவறான வரைபடம் கடந்த வெள்ளிக்கிழமை இரவு, "ஈரான் என்பது உலகளாவிய அச்சுறுத்தல்" என்ற உரையில் வெளியிடப்பட்டது.
வரைபடத்தில் ஈரானிலிருந்து ஒலிக்கும் செம்மண் வட்டங்கள் இந்தியாவையும் சேர்த்துப் பெரும் பகுதியை தாக்கும் சக்தியாக காட்டியது. ஆனால் அதில் இந்தியாவின் சர்வதேச எல்லைகள் தவறாகக் குறிக்கப்பட்டிருந்தது.
இதைனைப் பார்த்த இந்திய சமூக வலைதள பயனாளர்கள் பலர் குற்றச்சாட்டு முன்வைத்து, சிலர் நேரடியாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவையும் டேக் செய்தனர்.
“நீங்கள் இப்போது புரிந்துகொள்ளலாம், ஏன் இந்தியா சமநிலையில் நிற்கிறது என்பதை., அரச தந்திரத்தில் யாருமே உங்களுக்கு நண்பன் இல்லை” என்றொரு பயனர் எழுதியிருந்தார்.
இதையடுத்து, IDF நேரடியாக பதிலளித்து, “இந்த வரைபடம் ஒரு விளக்கக்காட்சி மட்டுமே. இது சரியான எல்லைகளை பிரதிபலிக்கவில்லை. ஏற்பட்ட தவறுக்கு மன்னிக்கவும்,” எனத் தெரிவித்தது.
இந்த விவகாரம் இந்தியா-இஸ்ரேல் உறவுகளில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியிருந்தாலும், இரு நாடுகளும் நீண்டகால தோழமையான ஒத்துழைப்பை பேணியுள்ளன. இந்தியா இஸ்ரேலின் முக்கிய ராணுவ வாடிக்கையாளராகவும், வர்த்தக கூட்டாளியாகவும் இருக்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |