இஸ்ரேல்-ஹமாஸ் போர்: கொல்லப்பட்ட குழந்தைகளின் மொத்த எண்ணிக்கை
இஸ்ரேல் ஹமாஸ் படையினர் இடையிலான போர் நடவடிக்கையில் இதுவரை 3,320 குழந்தைகள் கொல்லப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
முடிவில்லா போர் தாக்குதல்
அக்டோபர் 07ம் திகதி ஹமாஸ் படையினர் இஸ்ரேலுக்குள் அத்துமீறி நுழைந்து சரமாரி துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர்.
அத்துடன் காசா எல்லையில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இஸ்ரேலியர்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் பலரை பிணைக் கைதிகளாக ஹமாஸ் படையினர் பிடித்து சென்றனர்.
AFP
இதையடுத்து பதிலடியாக இஸ்ரேல் காசா மீது தொடர் ஏவுகணை தாக்குதல் மற்றும் தற்போது தரைவழி தாக்குதலை முன்னெடுத்து வருகிறது. இதனால் இரு பக்கமும் உயிரிழப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
இருப்பினும் போர் நிறுத்தம் தொடர்பாக உலக நாடுகள் மற்றும் ஐ.நா கொண்டுவந்த தீர்மானத்தை இரு தரப்புகளும் ஏற்க மறுத்து விட்டது.
3,320 குழந்தைகள் உயிரிழப்பு
இந்நிலையில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் படையினர் இடையிலான போர் தாக்குதலில் இதுவரை 9,217 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
Getty Images
20,000க்கும் மேற்பட்டோர் இந்த போர் நடவடிக்கையால் படுகாயமடைந்து உள்ளனர்.
இதற்கிடையில் ஹமாஸ் படையினர் மற்றும் இஸ்ரேல் ராணுவத்தினர் மத்தியில் நடந்து வரும் சண்டையில் 3,320 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |