இஸ்ரேல்-ஹிஸ்புல்லா இடையே எட்டப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தம்., இருந்தும் தொடரும் தாக்குதல்கள்
அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்ததன்படி, இஸ்ரேல் மற்றும் ஹெஸ்பொல்லா இடையே புதிய போர்நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது.
இருப்பினும், ஒப்பந்தம் அமுலுக்கு வந்த சில நிமிடங்களிலேயே தெற்கு லெபனானில் இஸ்ரேல் விமானத் தாக்குதல்களை தொடர்ந்துள்ளது.
லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்ததன்படி, நள்ளிரவு முதல் மதியம் வரை நடந்த தாக்குதல்களில் குறைந்தது 47 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதில் பெண்கள், குழந்தைகள் உட்பட பலர் உள்ளனர். மேலும் 97 பேர் காயமடைந்துள்ளனர்.

ஹிஸ்புல்லா தலைவர் நைம் காசம், “ஆக்கிரமிப்புக்கு எதிரான எங்கள் போராட்டம் தொடரும். ஒவ்வொரு எதிர்ப்பும் எங்களுக்கு வெற்றியாகும்” என்று கூறியுள்ளார்.
அமெரிக்கா-ஈரான் இடையே சமாதான ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தைகள் நடைபெறவிருந்தாலும், இஸ்ரேல் தாக்குதல்களின் காரணமாக அது தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஈரான், “இஸ்ரேலின் தொடர் போர் நடவடிக்கைகள் உடனடி விளைவுகளை ஏற்படுத்தும்” என்று எச்சரித்துள்ளது.
இதனிடையே, அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் "விரக்தியில்" ஈரான் இந்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக் கொண்டதாக கூறியுள்ளார். மேலும், ஈரானுக்கு "நிதியுதவியும் கிடைக்காது, பத்து காசு இல்லை" என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், லெபனான் ஜனாதிபதி ஜோசப் ஆவுன், “இஸ்ரேலின் தாக்குதல்கள் சமாதான முயற்சிகளை ஆபத்துக்குள் தள்ளுகின்றன. இருந்தாலும், முழுமையான போர்நிறுத்தத்தை எட்டுவதற்கான முயற்சிகளை தொடர்வோம்” என்று கூறியுள்ளார்.
விமான கண்காட்சியில் கவனம் ஈர்த்த எதிர்கால ஆயுதம்: ஐரோப்பா-அமெரிக்கா இணைந்து உருவாக்கும் சக்திவாய்ந்த ட்ரோன்
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |