அடுத்த 50 ஆண்டுகளுக்கான காசாவின் யதார்த்தத்தை மாற்றுவோம்! இஸ்ரேல் சூளுரை
அடுத்த 50 ஆண்டுகளுக்கான காசாவின் யதார்த்தத்தை மாற்றுவோம் என இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் சூளுரைத்துள்ளார்.
பரபரப்பின் உச்சக்கட்டத்தில் மோதல்
பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினர் Al-Aqsa Flood ஆபரேஷன் என்ற பெயரில் கிட்டத்தட்ட 5000 ஏவுகணைகளை இன்று அதிகாலை இஸ்ரேல் மீது ஏவி தாக்குதலை தொடங்கினர்.
இதில் 150 பேர் வரை கொல்லப்பட்டு இருப்பதோடு 1105 பேர் வரை படுகாயமடைந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனை தொடர்ந்து ஹமாஸ் அமைப்பினரின் தாக்குதலுக்கு பதிலடி தரும் விதமாக இஸ்ரேல் படையினரும் பதில் தாக்குதலை Operation Iron Swords என்ற பெயரில் முன்னெடுக்க தொடங்கியுள்ளனர்.
இதற்கிடையில் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரம் மீது பாலஸ்தீனியர்களின் காசா பகுதியில் இருந்து மீண்டும் 150 ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளது.
We will change reality on the ground in Gaza for the next 50 years.
— Visegrád 24 (@visegrad24) October 7, 2023
What was before, will be no more.
We will operate at full force,”
says Israeli Minister of Defense Yoav Gallant. ??
இஸ்ரேலிய அமைச்சர் சூளுரை
இந்நிலையில் அடுத்த 50 ஆண்டுகளுக்கான காசா பகுதியின் யாதார்த்தத்தை மாற்றியமைப்போம் என இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் சூளுரைத்துள்ளார்.
மேலும் முன்பு என்ன இருந்ததோ, அது இனி இருக்காது என தெரிவித்துள்ளார். அத்துடன் நாங்கள் முழு பலத்துடன் செயல்பட உள்ளோம் என்றும் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் தெரிவித்துள்ளார்.
BREAKING:
— Visegrád 24 (@visegrad24) October 7, 2023
Israel's Defense Minister Yoav Gallant:
"What has been, is not what will be. We will change the face of reality in Gaza"
Sounds like a ground offensive in Gaza and subsequent re-occupation of the area is imminent.
Israel withdraw from Gaza in 2005 pic.twitter.com/828zfH0o3S
ஹமாஸ் அமைப்பினரின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க ஏதுவாக காசாவின் மின் இணைப்பை இஸ்ரேல் முழுமையாக துண்டித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள் |