குண்டு மழை பொழிந்த போர் விமானங்கள்... மீண்டும் இஸ்ரேல்-பாலஸ்தீன இடையே அதிகரிக்கும் பதட்டம்
பாலஸ்தீனிய சுயாட்சி பகுதியான காசா மீது வான்வழித்தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
காசா மீது வான்வழித்தாக்குதல் நடத்தப்பட்டதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியான நிலையில் தற்போது இஸ்ரேல் அதை உறுதிசெய்துள்ளது.
செவ்வாய்க்கிழமை காசாவிலிருந்து பல எரியூட்டும் பலூன்கள் அனுப்பப்பட்டதாகவும், அதனால் இஸ்ரேலின் பல பகுதிகளில் தீ விபத்து ஏற்பட்டதாக இஸ்ரேல் தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் காசாவில் உள்ள ஹமாஸ் குழுவை குறிவைத்து வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் அதிகாரப்பூர்வமாக அறிவத்துள்ளது.
புதன்கிழமை அதிகாலை காசா நகர் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியுள்ளது.
This is Gaza right now, Israel has broken the ceasefire pic.twitter.com/rtgc4C0YOK
— Noor (@NoorAbdelHaq1) June 15, 2021
எனினும், இந்த தாக்குதலால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் உயிரிழப்புகள் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை. ச
மீபத்தில் இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே நடந்த பயங்கர மோதல் 11 நாட்களுக்கு பிறகு கடந்த மே 21ம் அன்று போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டதை தொடர்ந்து முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
இதைதொடர்ந்து, தற்போது மீண்டும் இரண்டு நாடுகளும் பரஸ்பர தாக்குலில் ஈடுபட்டுள்ளது மறுபடியும் பயங்கர மோதல் வெடிக்குமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.