ஒரே டெஸ்டில் 4 கேட்சுகளை தவறவிட்ட முதல் இந்திய வீரர்: லீட்ஸ் போட்டியில் மோசமான சாதனை
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்டில் இந்திய வீரர் ஜெய்ஸ்வால் மோசமான சாதனைக்கு சொந்தக்காரரானார்.
யஷஸ்வி ஜெய்ஸ்வால்
லீட்ஸின் ஹெடிங்லே மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.
இந்த டெஸ்டின் முதல் இன்னிங்சில் இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் (Yashasvi Jaiswal) 101 ஓட்டங்கள் விளாசினார்.
ஆனால் அவர் ஃபீல்டிங்கில் மோசமாக செயல்பட்டார். மொத்தம் 4 கேட்சுகளை ஜெய்ஸ்வால் தவறவிட்டார்.
மோசமான சாதனை
குறிப்பாக, இரண்டாவது டெஸ்டில் 97 ஓட்டங்களில் இருந்த பென் டக்கெட்டின் கேட்சை தவறவிட்டதால், அவர் 149 ஓட்டங்கள் குவித்தார்.
இந்த நிலையில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் (Yashasvi Jaiswal) ஒரே டெஸ்டில் 4 கேட்சுகளை தவறவிட்ட முதல் இந்திய வீரர் என்ற மோசமான சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார்.
போட்டியின் முக்கிய தருணங்களில் அவரது ஃபீல்டிங் செயல்பாடு மோசமாக இருந்ததும், தோல்விக்கு ஒரு காரணம் என சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் வசைபாடி வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |