இந்திய மாம்பழங்களுக்கு தடை விதித்த நாடு., 20 ஆண்டுகள் கழித்து மீண்டும் அதிரடி
20 ஆண்டுகள் கழித்து, மீண்டும் இந்திய மாம்பழங்களை இறக்குமதி செய்ய ஜப்பான் தடை விதித்துள்ளது.
ஜப்பான் அரசு, 2026-ஆம் ஆண்டுக்கான இந்திய மாம்பழ இறக்குமதியை முழுமையாக நிறுத்தியுள்ளது.
மார்ச் மாதத்தில் ஜப்பான் அதிகாரிகள் இந்தியாவின் நீராவி வெப்ப சுத்தகரிப்பு (Vapour Heat Treatment) நிலையங்களை ஆய்வு செய்தபோது, கிருமி நீக்கம் மற்றும் புகையிடுதல் (Fumigation) முறைகளில் குறைபாடுகள் இருப்பதாக கண்டறிந்தனர்.
இதன் விளைவாக அல்போன்சோ, கேசர், லங்க்ரா, பங்கனப்பள்ளி உள்ளிட்ட முக்கிய ஏற்றுமதி வகைகள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த தடை ஏப்ரல் முத்தால் ஜூன் வரை உள்ள உச்ச ஏற்றுமதி காலத்தை நேரடியாக பாதிக்கிறது.

1986-ல் ஜப்பான் இந்திய மாம்பழங்களை FruitFly தொற்று காரணமாக தடை செய்தது. அந்த தடை 20 ஆண்டுகள் நீடித்து, 2006-ல் இரு நாடுகளின் ஒப்பந்தத்தின் அடிப்படையில் மீண்டும் ஏற்றுமதி தொடங்கப்பட்டது.
இந்திய மாம்பழங்கள் ஜப்பானுக்கு செல்ல, VHT முறையில் சுத்திகரிப்பது கட்டாயம். ஒவ்வொரு சீசனிலும் ஜப்பான் அதிகாரிகள் நேரடியாக கண்காணிக்க வேண்டும். ஆனால் இந்த ஆண்டு உத்தர பிரதேசத்தில் உள்ள ரெஹ்மான்பூர் நிலையத்தில் ஆய்வின்போது குறைபாடுகள் கண்டறியப்பட்டதால் ஜப்பான் அதிகாரிகள் இறக்குமதியை நிறுத்தியுள்ளனர்.
ஜப்பான் இந்திய மாம்பழங்களுக்கான முக்கிய சந்தை அல்ல. ஐக்கிய அரபு அமீரகம், பிரித்தானியா, குவைத், கத்தார் ஆகியவை இந்தியாவின் முக்கிய ஏற்றுமதி நாடுகளாக உள்ளன. இருந்தாலும், ஜப்பான் சந்தையில் உயர்ந்த விலை கிடைப்பதால், இந்த தடை இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு பெரிய நிதி இழப்பை ஏற்படுத்துகிறது.
மேலும், இந்தி சீசனில் மகாராஷ்டிராவின் அல்போன்சோ மரங்கள் வெப்ப அலை காரணமாக ஏற்கெனவே பாதிக்கப்பட்டுள்ளது. அதோடு மேற்கு ஆசியாவில் ஏற்பட்ட போர் காரணமாக கப்பல் செலவுகள் அதிகரித்துள்ளதால், ஏற்றுமதி சிரமம் மேலும் அதிகரித்துள்ளது.
ஜப்பான் அதிகாரிகள், இந்தியா தனது நிலையங்களில் தரத்தை மேம்படுத்தும் வரை இறக்குமதி தடை நீடிக்கும் என அறிவித்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |