அதிக ஆயுதங்கள் வாங்க கட்டாயப்படுத்திய ட்ரம்ப் நிர்வாகம்... பேச்சுவார்த்தையை ரத்து செய்த ஆசிய நாடு
ட்ரம்ப் நிர்வாகம் பாதுகாப்புக்காக அதிக செலவு செய்யக் கோரியதைத் தொடர்ந்து, ஜப்பான் தனது முக்கிய கூட்டாளியான அமெரிக்காவுடனான வழக்கமான உயர்மட்டக் கூட்டத்தை ரத்து செய்துள்ளது.
3.5 சதவீதமாக உயர்த்துமாறு
வெளிவிவகார செயலாளர் மார்கோ ரூபியோ மற்றும் பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் ஆகியோர் ஜூலை 1 ஆம் திகதி வாஷிங்டனில் வெளிவிவகார அமைச்சர் தகேஷி இவாயா மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் நகடானியை வருடாந்திர 2+2 பாதுகாப்பு பேச்சுவார்த்தைக்காக சந்திப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், ஜப்பானின் பாதுகாப்பு செலவினங்களை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.5 சதவீதமாக உயர்த்துமாறு அமெரிக்கா கேட்டுக் கொண்டதை அடுத்து, ஜப்பான் கூட்டத்தை ரத்து செய்தது.
ஜப்பான் உட்பட அமெரிக்காவின் ஆசிய நட்பு நாடுகள் தங்களின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 சதவீதம் பாதுகாப்புக்காக செலவிட வேண்டும் என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் கட்டாயப்படுத்துவதாக ஜப்பானின் நிக்கி செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
ஜப்பான் தரப்பில் உறுதி
அதிக ஆயுதங்கள் வாங்க கட்டாயப்படுத்துவதால் மட்டுமே கூட்டத்தை ரத்து செய்ததாக ஜப்பான் தரப்பில் உறுதி செய்யப்படவில்லை என்றாலும், அதுவே உண்மை நிலை என நிபுணர்கள் தரப்பு சுட்டிக்காட்டுகின்றனர்.
முன்னதாக மார்ச் மாதத்தில், பிரதமர் ஷிகெரு இஷிபா தெரிவிக்கையில் ஜப்பானின் பாதுகாப்பு வரவு செலவுத் திட்டத்தை மற்ற நாடுகள் தீர்மானிக்கத் தேவையில்லை என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |