வட கொரியாவிற்கு பதிலடி கொடுக்க தயாரான முக்கிய மூன்று நாடுகள்: போர் பயிற்சி நாளை முதல் ஆரம்பம்
வடகொரியா கிழக்கு கடல் பகுதியில் அடையாளம் அறியப்படாத பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவி தாக்குதல்.
வட கொரியாவிற்கு எதிராக அமெரிக்கா, ஜப்பான், மற்றும் தென் கொரிய நாடுகள் போர் பயிற்சி.
அமெரிக்கா, ஜப்பான், மற்றும் தென் கொரியா ஆகிய மூன்று நாடுகளும் இணைந்து நீர்மூழ்கி கப்பல் எதிர்ப்பு பயிற்சியினை வட கொரியாவிற்கு எதிராக மேற்கொண்டுள்ளனர்.
அமெரிக்காவின் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் தென் கொரியா-விற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளலாம் என எதிர்பார்க்கப்பட்ட ஒரு நாளுக்கு முன்னதாக, வடகொரியா கிழக்கு கடல் பகுதியில் அடையாளம் அறியப்படாத பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவி தாக்குதல் நடத்தினர்.
REUTERS
இந்த நிலையில் தென் கொரியா வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய மூன்று நாடுகளும் இணைந்து ஜப்பான் கடல் பகுதியில் நீர்மூழ்கி எதிர்ப்பு பயிற்சியில் வெள்ளிக்கிழமை ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளது.
யோன்ஹாப்பின் கூற்றுப்படி, இந்த பயிற்சிகளில் “நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்படும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவுவதற்கான திறன்களைக் கொண்ட வட கொரிய நீர்மூழ்கிக் கப்பல்களைக் கண்டறிதல், அடையாளம் காண்பது மற்றும் கண்காணிப்பது” ஆகியவை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
EPA
கூடுதல் செய்திகளுக்கு: கல்லினன் வைர பதக்கம்: ராணிக்கு அடுத்து யாருக்கு சொந்தம்? ரகசியமாக வைக்கப்பட்டுள்ள உயில்கள்
இறுதியாக 2017 மூன்று நாடுகளும் இணைந்து இதுபோன்ற பயிற்சியில் ஈடுபட்டதாகவும், அவற்றில் ராணுவ ஒத்துழைப்பு மீட்டெடுத்தல் மற்றும் வட கொரியாவின் அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை மிரட்டலுக்கு பதிலளிப்பது போன்றவை குறிக்கோளாக வைக்கப்பட்டு இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.