80 கி.மீ. கடலுக்குள் அடித்துச்செல்லப்பட்ட பெண்., இரண்டாவது நாளில் உயிருடன் மீட்பு
ஜப்பான் கடற்கரையில் நீந்திக் கொண்டிருந்த பெண் ஒருவர் சுமார் 80 கிலோமீட்டர் தூரம் கடலுக்குள் அடித்து செல்லப்பட்டார்.
ஆனால் அப்பெண்ணை கடலோர காவல்படை கடற்படையினர் காப்பாற்றினர்.
தோழியுடன் கடற்கரைக்கு சென்ற 20 வயது சீனப் பெண், இடுப்பில் ரப்பர் வளையத்தை சுற்றிக் கொண்டு கடலில் நீந்தியுள்ளார்.
ஆனால் கடல் அலைகளுக்கு இடையே சிக்கி அவர் 80 கிலோமீட்டர் தூரத்திற்கு ஆழமான கடல் பகுதிக்கு அடித்துச் செல்லப்பட்டார்.
நீராடச் சென்ற பெண்ணைக் காணவில்லை என அவரது தோழி புகார் அளித்துள்ளார். இதையடுத்து, கடலோர காவல் படை ஹெலிகாப்டர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டன.
சுமார் இரண்டு நாட்கள் கழித்து...
சுமார் 37 மணி நேரம் கழித்து அவர் கரை ஒதுங்கினார். என்னதான் மூழ்கிவிடாமல் பாதுகாத்தாலும், ரப்பர் வளையம் இருந்ததால் கரைக்கு வருவதற்கு சிரமமாக இருந்ததாக அவர் கூறியுள்ளார்.
போசோ தீவு அருகே ஒரு கப்பல் அந்தப் பெண்ணைக் கண்டது. கப்பலில் இருந்த இருவர் கடலில் குதித்து அவரை மீட்டுள்ளனர்.
கப்பலில் இருந்து அவர் கடற்படை விமானத்தில் மீட்கப்பட்ட காணொளி வெளியாகியுள்ளது.
இரண்டு நாட்கள் கடல் நீரில் தத்தளித்ததால் அவரது உடலில் நீரிழப்பு (dehydrated) ஏற்பட்டுள்ளது. ஆனால் அவர் சுயநினைவுடன் இருப்பதாக கடலோர காவல்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |