சரக்குக் கப்பலுடன் நீர்மூழ்கிக் கப்பல் மோதி பயங்கர விபத்து! பல மணிநேரம் சிக்கி தவித்த குழுவினர்: என்ன நடந்தது?
பசிபிக் பெருங்கடலில் ஜப்பானிய நீர்மூழ்கிக் கப்பலான Soryu, சரக்குக் கப்பலுடன் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விபத்து குறித்து ஜப்பானிய கடற்படை வெளியிட்ட தகவலின் படி, தெற்கு தீவான ஷிகோக்கு தீவில் அதன் நீர்மூழ்கிக் கப்பலான Soryu, சரக்குக் கப்பல் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவித்தது.
இந்த விபத்தில் நீர்மூழ்கிக் கப்பலின் antenna mast மற்றும் பிற மேல் பாகங்கள் சற்று சேதமடைந்தன மற்றும் மூன்று பணியாளர்கள் காயமடைந்தனர் என ஜப்பான் ஊடகம் தகவல் தெரிவித்துள்ளது.
இருப்பினும், சமூக ஊடகங்களில் வெளிவந்த புகைப்படங்கள், Soryu-வுக்கு அதிக சேதம் ஏற்பட்டுள்ளதை காட்டுகின்றன.
Soryu-வுடன் மோதியது சீனாவின் Qingdao-விலிருந்து இரும்புத் தாதுவை ஏற்றிச் செல்லும் ஹாங்காங் கொடியிடப்பட்ட சரக்குக் கப்பலான Ocean Artemis ஆக இருக்கலாம்.
Ocean Artemis கப்பல் Soryu-வின் அளவை விட 17 மடங்கு அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
#Japan submarine Sōryū shown with damaged sail diving plane after collision with civilian ship https://t.co/IlzRxbrezK pic.twitter.com/r6Ob2x8kn8
— Joseph Dempsey (@JosephHDempsey) February 8, 2021
திங்களன்று ஒரு வழக்கமான பயிற்சிப் பணியின் போது Soryu, Ocean Artemis-வுடன் மோதியது.
விபத்தில் நீர்மூழ்கிக் கப்பலின் தகவல் தொடர்பு அமைப்பு சோதமடைந்ததால், குழுவினர் விபத்து குறித்து தகவலை தெரிவிக்க முடியாமல் பல மணிநேரம் தவித்துள்ளனர்.
பின்னர், கரைக்கு அருகே இந்ததால் செல்போனில் அழைத்து விபத்து குறித்து தகவல் தெரிவித்துள்ளனர்.