மீண்டும் போரைத் தொடங்க ட்ரம்ப் தயங்க மாட்டார்... ஈரானுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்த ஜேடி வேன்ஸ்
ஈரானின் எதிர்காலம் குறித்த அனைத்து முடிவுகளும் அமெரிக்காவின் கையில்தான் என்றும், அமெரிக்காவுடன் செய்துகொள்ளவிருக்கும் ஒப்பந்தத்தை ஈரான் மீறினால், டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் ஈரான் மீது போரைத் தொடங்குவார் என்றும் ஜேடி வேன்ஸ் கூறியுள்ளார்.
ஆழ்ந்த சந்தேகத்துடன்
ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவரும் ஒரு உடன்பாட்டை அமெரிக்காவும் ஈரானும் எட்டியுள்ளதாக ஜனாதிபதி ட்ரம்ப் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.

இந்த நிலையில், அமெரிக்காவும் அதன் மத்திய கிழக்கு நட்பு நாடுகளும் ஈரான் மீது ஆழ்ந்த சந்தேகத்துடன் இருப்பதாக திங்கள்கிழமை இரவு ஜேடி வேன்ஸ் தெரிவித்துள்ளார்.
மட்டுமின்றி, ஈரான் தாங்கள் வாக்குறுதியளித்ததைச் செய்யாவிட்டால், ட்ரம்ப் மீண்டும் தாக்குதல்களைத் தொடங்குவார் என்றும் ஜேடி வேன்ஸ் இறுதி எச்சரிக்கை விடுத்தார்.
ஈரான் அளித்த வாக்குறுதிகளை மதிக்கவில்லை என்றால், போரைத் தொடங்க ட்ரம்ப் தயங்க மாட்டார் என வேன்ஸ் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஈரானியர்கள் எந்தளவுக்குத் தீவிரமாக இருக்கிறார்கள் என்பதை அறிவதற்கான ஒரு முயற்சியாகவே இந்த ஒப்பந்தம் அமையவுள்ளது; இருப்பினும், அமெரிக்காவும் அதன் மத்திய கிழக்கு நட்பு நாடுகளும் இது குறித்துச் சந்தேகம் கொண்டுள்ளனர் என்றே ஜேடி வேன்ஸ் தெரிவித்துள்ளார்.

பல தசாப்தங்களாக
இந்த உறவுகளின் இறுதி நோக்கம் ஆட்சி மாற்றம் அல்ல, மாறாக ஈரானை இன்னும் சிறப்பாகச் செயல்பட வைப்பதே என்று வேன்ஸ் கூறியுள்ளார். ட்ரம்ப் தனது 80-வது பிறந்தநாளைக் கொண்டாடிய அதே நாளில்தான் ஈரான் அமைதி ஒப்பந்தம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.
ஈரான் உடனான ஒப்பந்தம் தற்போது நிறைவடைந்தது. அனைவருக்கும் வாழ்த்துகள்! என்று ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிவிட்டார்.

இதனிடையே, அணு ஆயுதங்களைத் தயாரிக்கவோ அல்லது பெறவோ மாட்டோம் என்ற ஈரானின் ஒப்புதலை ஈரான் மற்றும் அமெரிக்கா உறுதிப்படுத்தின; இத்தகைய வாக்குறுதியை ஈரான் பல தசாப்தங்களாகத் தொடர்ந்து அளித்து வருகிறது.
ஆனால் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் அழுத்தம் காரணமாகவே ஈரான் மீது போர் தொடுக்கப்பட்டதும், தற்போது ஈரானுக்கு ஒருவகையில் சாதகமான ஒப்பந்தம் ஒன்று இறுதியில் முடிவு செய்யப்பட்டதும். இதை சற்றும் எதிர்பாராத நெதன்யாகு, ட்ரம்ப் நிர்வாகத்துடன் மோதல் போக்கில் உள்ளார் என்றே தகவல் கசிந்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |