கிரெடிட் கார்டு மோசடியில் ரூ.7 கோடியை இழந்த பிரபல நடிகர்
பிரபல ஹாலிவுட் நடிகர் கிரெடிட் கார்டு மோசடியில் ரூ.7 கோடியை இழந்துள்ளார்.
ரூ.7 கோடியை இழந்த ஜானி டெப்
அமெரிக்காவை சேர்ந்த பிரபல நடிகரான ஜானி டெப், பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் என்ற படத்தில் கேப்டன் ஜாக் ஸ்பாரோ என்னும் பாத்திரத்தில் நடித்ததன் மூலம் உலகப் புகழ்பெற்றார்.

ஜானி டெப் கிரெடிட் கார்டு மோசடியில் சிக்கி, 5,20,000 பவுண்டுகள்(இந்திய மதிப்பில் சுமார் ரூ.7கோடி) பணத்தை இழந்துள்ளார்.
டெப்பின் கணக்குடன் தொடர்புடைய சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனையை ஒரு அமெரிக்க வங்கி கண்டறிந்து அதிகாரிகளுக்குத் தெரிவித்ததையடுத்து இந்த வழக்கு வெளிவந்தது.
2024 ஜனவரி முதல் 2025 டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் இந்த மோசடி நடைபெற்றுள்ளது.
இந்தக் காலகட்டத்தில், டெப்பின் கிரெடிட் கார்டு மூலம், இணையவழி கொள்முதல்கள், தங்குமிட முன்பதிவுகள் மற்றும் இணையதளங்கள் மூலம் செய்யப்பட்ட பிற கொடுப்பனவுகள் உட்பட 308 தனித்தனி பரிவர்த்தனைகளுக்குப் பயன்படுத்தப்பட்டு, 5,20,000 பவுண்டுகளுக்கு அதிகமாக செலவிடப்பட்டுள்ளது.

பிடிபடாமல் இருப்பதற்காக, வேண்டுமென்றே சிறிய அளவிலான பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக புலனாய்வாளர்கள் நம்புகின்றனர்.
மே 6 அன்று, டெப்பின் கணக்கிலிருந்து ஆங்கியால்ஃபோல்ட் பகுதியில் உள்ள ஒரு வாடகைக் குடியிருப்புக்கு அந்தப் பணம் சென்றதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அங்கிருந்த பல்ஹேரியாவை சேர்ந்த 27 வயது இளைஞர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
முன்பதிவுகளுக்குப் பயன்படுத்தப்பட்ட ஹங்கேரிய தொலைபேசி எண், ஐபி முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் கணக்குகள் மூலம் அதிகாரிகள் அவரை அந்தப் பரிவர்த்தனைகளுடன் தொடர்புபடுத்தியுள்ளனர்.
அவருக்கு எப்படி டெப்பின் கிரெடிட் கார்டு தரவுகள் கிடைத்தது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
தனது அட்டைத் தகவல்கள் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வந்ததை டெப் முற்றிலும் அறிந்திருக்கவில்லை என்று கூறப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |