ஓமனில் ஏற்பட்ட திடீர் வெள்ளம்., இந்தியர் உட்பட 12 பேர் பலி
ஓமனில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் இந்தியர் ஒருவர் உட்பட 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த இந்தியர் கேரளாவின் கொல்லத்தை சேர்ந்த சுனில் குமார் சதானந்தன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதற்கிடையில், வெள்ளத்தில் காணாமல் போன மூன்று குழந்தைகளின் உடல்களையும் அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
காணாமல் போன மேலும் 5 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஓமன் நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
இங்கு மெக்கானிக்காக பணிபுரிந்து வந்த சுனில் குமார் மதியம் 3 மணியளவில் தெற்கு ஷர்கியா பகுதியில் சுவர் இடிந்து விழுந்து இறந்தார்.
ஓமனில் சனிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வரை பெய்த கனமழையால் பாரிய அளவிலான சேதம் ஏற்பட்டுள்ளது.
கனமழை மற்றும் வெள்ளம் மஸ்கட், தெற்கு-வடக்கு ஷர்கியா, டாகிலியா மற்றும் தாஹிரா மாகாணங்களில் பேரழிவை ஏற்படுத்தியது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Oman Flash Floods, Oman Rainfall and Flood, Malayali Oman Flood