ஓமனில் எரிவாயு சிலிண்டர் வெடித்து கேரள தம்பதி உயிரிழப்பு: சோகத்தில் குடும்பத்தினர்!
ஓமனில் எரிவாயு சிலிண்டர் வெடித்து கேரள தம்பதி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்து
கேரளாவைச் சேர்ந்த இந்திய தம்பதியினர் ஓமனில் ஏற்பட்ட துயரச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.
கண்ணூர் மாவட்டம் தலச்சேரியைச் சேர்ந்த பங்கஜாக்சன் (59) மற்றும் அவரது மனைவி சஜிதா (53) ஆகியோர் கடந்த சில ஆண்டுகளாக ஓமனில் வசித்து வந்துள்ளனர்.
மஸ்கட் கவர்னரேட் பகுதியில் செயல்பட்டு வந்த ஒரு உணவகத்தின் மேல் மாடியில் இருந்த குடியிருப்பில் அவர்கள் வசித்து வந்தனர்.
அதிகாலை வேளையில் அந்த உணவகத்தில் ஏற்பட்ட பயங்கரமான எரிவாயு சிலிண்டர் வெடி விபத்தின் காரணமாக அந்த கட்டடம் இடிந்து விழுந்தது.
இந்த துரதிர்ஷ்டவசமான விபத்தில் பங்கஜாக்சன் மற்றும் சஜிதா இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த செய்தி கிடைத்தவுடன், சென்னையில் வசித்து வரும் அவர்களின் மகள் ஓமனுக்கு விரைந்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |