உண்மையான எதிரியை அடையாளம் காணுங்கள்: முஸ்லிம் நாடுகளுக்கு மொஜ்தபா கமேனி கடிதம்
Mojtaba Khamenei's Letter To Muslim Countries: முஸ்லிம் நாடுகளுக்கு மொஜ்தபா கமேனி கடிதம் எழுதியுள்ளார்.
ஈரானின் உயர் தலைவர் மொஜ்தபா கமேனி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக ஒன்றிணையுமாறு அப்பிராந்தியத்தில் உள்ள முஸ்லிம் நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
தீர்வு என்பது
மத்திய கிழக்குப்போர் தொடங்கி ஆறு மாதங்கள் கடந்த நிலையில் ஞாயிறன்று வெளியிடப்பட்ட ஒரு கடிதத்தில் இதை அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிப்ரவரி 28 அன்று போர் தொடங்கியபோது அலி கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அதிகாரத்திற்கு வந்த மொஜ்தபா கமேனி, பதவியேற்றதிலிருந்து இதுவரை பொதுவெளியில் காணப்படவில்லை; மேலும் அதிகாரிகள் அவரைப் பற்றிய எந்தவொரு காணொளியையோ அல்லது ஒலிப்பதிவையோ வெளியிடவில்லை.
இந்த நிலையில், வெளியாகியுள்ள கடிதத்தில், இஸ்லாமிய நாடுகளின் பிரச்சினைகளுக்குத் தீர்வு என்பது நல்வழியில் ஒற்றுமை, நட்பு மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றிலேயே உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
ஷியா முஸ்லிம்கள் நபிகள் நாயகத்தின் பிறந்தநாளைக் கொண்டாடி வரும் நிலையிலேயே அவரது கடிதமும் வெளியாகியுள்ளது.
எந்தவொரு பதவியில் இருப்பவரானாலும் சரி, தெரிந்தோ அல்லது தெரியாமலோ, வேண்டுமென்றோ அல்லது தற்செயலாகவோ, முஸ்லிம்களிடையே பிளவை ஏற்படுத்தும் அல்லது முஸ்லிம் சமூகத்தில் மோதலை உருவாக்கும் செயலில் ஈடுபடுபவர் எவரும் இஸ்லாத்தின் எதிரிகளின் நோக்கத்திற்கே சேவை செய்தவராவார் எனவும் கமேனி குறிப்பிட்டுள்ளார்.
மட்டுமின்றி, பிராந்திய நாடுகளின் ஆட்சியாளர்கள் தங்கள் உண்மையான எதிரியை அடையாளம் கண்டு, அதன் திட்டத்தைப் புரிந்துகொண்டு, அதை எதிர்கொள்ளுமாறும் கமேனி அழைப்பு விடுத்துள்ளார்.
போரின்போது, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், ஜோர்டான், குவைத், கத்தார் மற்றும் பஹ்ரைன் உள்ளிட்ட மத்திய கிழக்கு முழுவதும் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களை ஈரான் குறிவைத்தது. அதன்பிறகு அந்த நாடுகளுடனான உறவுகள் மோசமடைந்துள்ளன.
டொலர் பயன்பாடு
முக்கிய அரசு கொள்கைகள் குறித்து இறுதி முடிவெடுக்கும் அதிகாரத்தைக் கொண்ட கமேனி, ஈரானிய அதிகாரிகளும் குடிமக்களும் தங்கள் கருத்து வேறுபாடுகளை மறந்து, இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவிற்கு எதிராக ஒன்றிணையுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், சமூக நல்லிணக்கத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் எதையும் செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது என்று நான் உறுதியாகத் தெரிவிக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
மட்டுமின்றி, பல மாதங்களாக நீடித்த அமெரிக்கக் கடற்படை முற்றுகை மற்றும் வாழ்வாதாரங்களைப் பாதித்த பல ஆண்டுகால முடக்கும் பொருளாதாரத் தடைகளுக்குப் பிறகு, ஈரானியப் பொருளாதாரத்தை படிப்படியாக டொலர் பயன்பாட்டிலிருந்து விடுவிக்கவும், வளர்ச்சியை ஆதரிக்கும் வகையில் பொருளாதார உற்பத்தியை அதிகரிக்கவும் அவர் வெள்ளிக்கிழமை அழைப்பு விடுத்திருந்தார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |