400 ஆண்டுகால வரலாற்றில் முதல் ஆளும் நபர்..வருந்துவதாக கூறிய மன்னர் சார்லஸ்
பெர்முடாவிற்கு வந்த முதல் ஆளும் அரசர் என்பதை அறிந்து, பிரித்தானிய மன்னர் சார்லஸ் ஆச்சரியமடைந்தார்.
பெர்முடாவுக்கு முதல் பயணம்
அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரித்தானிய மன்னர் சார்லஸ், வாஷிங்டனில் இருந்து தீவு தேசமான பெர்முடாவுக்கு விமானத்தில் சென்றார்.
வெள்ளிக்கிழமை அன்று, சார்லஸுக்கு பெர்முடா கடலோரக் காவல்படையுடன் ஒரு சிறப்பு படகு பயணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அங்கு அவரை வரவேற்க பெருந்திரளான மக்கள் திரண்டிருந்தனர். அவர் எட்டு பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்.
மிகுந்த வியப்பு
தோட்ட விருந்தில் கலந்துகொண்ட சார்லஸ், இதற்கு முன்பு பெர்முடாவிற்கு ஒரு ஆளும் மன்னர் வந்ததில்லை என்பதை அறிந்தபோது தனக்கு மிகுந்த வியப்பு ஏற்பட்டதாகக் கூறினார்.

பெர்முடாவின் 400 ஆண்டு கால வரலாற்றில், அந்நாட்டிற்கு வருகை தந்த முதல் ஆளும் ஆண் மன்னர் என்ற பெருமையைப் பெற்ற மன்னர் சார்லஸ், தோட்ட விருந்திற்கு வந்திருந்த விருந்தினர்களிடம், 'இவ்வளவு காலம் ஆகிவிட்டதற்கு நான் மிகவும் வருந்துகிறேன்!' என்று கூறி அனைவரையும் புன்னகைக்க வைத்தார்.
மேலும் அவர் பேசுகையில், 'மற்ற அனைத்து வெளிநாட்டுப் பிரதேசங்களைப் போலவே, பெர்முடாவும் பிரித்தானிய குடும்பத்தின் மிகவும் போற்றப்படும் மற்றும் முக்கியமான ஓர் உறுப்பினர் என்பதை நான் சொல்லத் தேவையில்லை - இந்த பாறை என்று அழைக்கப்படும் இடத்தைப் போல உறுதியான நட்புறவைக் கொண்டது' என்றார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |