இளவரசர் ஆண்ட்ரூவின் மகள்களை ஒதுக்கிவைக்க மன்னர் சார்லஸ் முடிவு
சர்ச்சையில் சிக்கிய இளவரசர் ஆண்ட்ரூவின் மகள்களை ஒதுக்கிவைக்க மன்னர் சார்லஸ் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சர்ச்சையில் சிக்கிய இளவரசரும் மனைவியும்
இளவரசர் ஆண்ட்ரூவும் அவரது முன்னாள் மனைவியான சாரா ஃபெர்குசனும், ஏராளம் இளம்பெண்களை சீரழித்த அமெரிக்கக் கோடீஸ்வரரான ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்பிலிருந்த விடயம் தெரியவந்ததால், ராஜ குடும்பத்திலிருந்து ஒதுக்கிவைக்கப்பட்டுள்ளார்கள்.

என்றாலும், ஆண்ட்ரூ சாரா தம்பதியரின் மகள்களான இளவரசிகள் பீட்ரைஸ் மற்றும் யூஜீனி மீது அளவுகடந்த அன்பு வைத்திருந்ததால், மன்னர் சார்லஸ் அவர்களுக்கு ஆதரவாகவே செயல்பட்டுவந்தார்.
ஆகவே, அவர்கள் வழக்கம்போலவே ராஜ குடும்பத்துடன் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவந்தார்கள்.
கடந்த கிறிஸ்துமஸ் பண்டிகையின்போதுகூட அனைவரும் இணைந்து தேவாலய ஆராதனையில் கலந்துகொண்டார்கள்.
ஆனால், இளவரசிகள் பீட்ரைஸும் யூஜீனியும், ஒரு சிறுமியை சீரழித்த குற்றத்துக்காக சிறை சென்று திரும்பி, காலில் மின்னணுப்பட்டையுடன் இருக்கும் மோசமான குற்றவாளியான எப்ஸ்டீனை, அவர் வீட்டுக்கு, தங்கள் தாயுடன் சென்று சந்தித்த விடயம், அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட எப்ஸ்டீன் கோப்புகள் என்னும் ஆவணங்கள் மூலம் சமீபத்தில் தெரியவந்தது.
அந்த தகவல் வெளியானதும், அதுவரை இளவரசிகள் மீது பரிதாபம் கொண்டிருந்த பிரித்தானிய மக்கள் கோபமடைந்தார்கள்.
அதைத் தொடர்ந்து, அவர்கள் இருவரையும்கூட ராஜ குடும்பத்திலிருந்து ஒதுக்கிவைக்கவேண்டும் என குரல்கள் ஒலிக்கத் துவங்கியுள்ளன.
ஆண்ட்ரூ, சாரா மற்றும் இளவரசிகள் பீட்ரைஸ் மற்றும் யூஜீனி மீதான கோபம், மன்னராட்சிக்கே எதிராக திரும்பும் அபாயம் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, தற்போது ஆண்ட்ரூ, சாராவைப்போலவே, இளவரசிகள் பீட்ரைஸ் மற்றும் யூஜீனியையும் ராஜகுடும்பத்திலிருந்து ஒதுக்கிவைக்க மன்னர் சார்லஸ் முடிவு செய்துள்ளதாக அரண்மனை வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஆகவே, வரும் ஈஸ்டர் ஞாயிறு ஆராதனையில், இளவரசிகள் பீட்ரைஸ் மற்றும் யூஜீனி ராஜ குடும்பத்துடன் பங்கேற்க தடை விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
மேலும், பக்கிங்காம் அரண்மனையில் அவ்வப்போது garden party என்னும் பார்ட்டிகள் நடத்தப்படும். கடந்த முறை இளவரசர் வில்லியமும் இளவரசி கேட்டும் நடத்திய பார்ட்டியில் இளவரசிகள் பீட்ரைஸும் யூஜீனியும் பங்கேற்றார்கள்.
ஆனால், மன்னரே அவர்களை ஒதுக்கிவைக்க முடிவு செய்துள்ளதால், இனி நடத்தப்படும் garden party என்னும் பார்ட்டிகளில் கலந்துகொள்ள இளவரசிகள் பீட்ரைஸ் மற்றும் யூஜீனிக்கு இளவரசர் வில்லியமும் கேட்டும் அழைப்பு விடுக்க வாய்ப்பில்லை என ராஜ குடும்ப எழுத்தாளரான ரஸ்ஸல் மையர்ஸ் என்பவரும் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |