ட்ரம்பின் நடவடிக்கைகளை மொத்தமாக நம்பிவிட வேண்டாம்: மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த ரஷ்யா
உக்ரைனுக்கு எதிரான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் சமீபத்திய நடவடிக்கைகளை மொத்தமாக நம்பிவிட வேண்டாம் என்று ரஷ்யர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய மக்கள் உற்சாகம்
ரஷ்ய ஜனாதிபதி மாளிகையின் செய்தித்தொடர்பாளர் Dmitry Peskov என்பவரே இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
எலோன் மஸ்க் தனது ஸ்டார்லிங்க் தகவல் தொடர்பு அமைப்பிலிருந்து உக்ரேனிய இராணுவத்தைத் துண்டிப்பார் என விடுக்கப்பட்ட மிரட்டல் அல்லது உக்ரேனுக்கான இராணுவ உதவியை நிறுத்த ட்ரம்ப் கடந்த வாரம் எடுத்த முடிவு குறித்து ரஷ்ய மக்கள் உற்சாகமாக உள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர்,
இந்த நடவடிக்கைகளை மக்கள் மொத்தமாக நம்பிவிட வேண்டாம் என குறிப்பிட்டுள்ளார். நாம் எப்போதும் சிறந்ததை எதிர்பார்க்க வேண்டும், ஆனால் மோசமானவற்றுக்கும் தயாராக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ள அவர், நமது நலன்களைப் பாதுகாக்க எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என்றார்.
உக்ரைன் அதிகாரிகளை செவ்வாய்க்கிழமை அமெரிக்க அதிகாரிகள் தரப்பு சவுதி அரேபியாவில் சந்திக்கவிருக்கும் நிலையிலேயே Dmitry Peskov இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக, அந்தப் போரை தொடங்கிய ரஷ்யாவிற்கு சலுகைகளை வழங்க உக்ரைன் தயாராக உள்ளதா என்பதைத் தீர்மானிக்கும் ஒரு சந்திப்பாக இது அமைய உள்ளது.
ட்ரம்ப் நிர்வாகம்
உக்ரைன் போரில் தமது இலக்கை ரஷ்யா அடைந்து வருவதாகவும் Dmitry Peskov தெரிவித்துள்ளார். ட்ரம்ப் நிர்வாகம் தற்போது உக்ரைனுக்கான ஆயுத உதவிகளை நிறுத்தியிருந்தாலும், அடுத்த பல மாதங்கள் போரிடுவதற்கான ஆயுதங்களை உக்ரைன் சேமித்து வைத்துள்ளதாகவும் Dmitry Peskov குறிப்பிட்டுள்ளார்.
கடந்த முறை ரஷ்யாவும் அமெரிக்காவும் உக்ரைன் போர் தொடர்பில் சவுதி அரேபியாவில் பேச்சுவார்த்தை ஒன்றை முன்னெடுத்தது. அதில், ரஷ்ய - அமெரிக்க உறவை மேம்படுத்தும் விவாதங்களே அதிக முக்கியத்துவம் பெற்றிருந்ததாக கூறப்படுகிறது.
இந்த சந்திப்புக்கு பின்னரே, உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி அமெரிக்காவுக்கு அழைக்கப்பட்டு, வெள்ளை மாளிகையில், சர்வதேச செய்தி ஊடகங்கள் முன்னிலையில் அவமானப்படுத்தப்பட்டார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |