குவைத் தீ விபத்தில் உயிரிழந்த இந்தியர்களின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சம் நிவாரணம்!
குவைத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த இந்தியர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கவுள்ளதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
குவைத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து
தெற்கு குவைத்தின் மங்காஃப் பகுதியில் வெளிநாட்டு தொழிலாளர்கள் வசிக்கும் பல மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 49 பேர் உயிரிழந்துள்ளனர்.
பெரும்பாலும் இந்தியர்களும் 50 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குவைத்தில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து டெல்லியில் உள்ள பிரதமர் மோடி இல்லத்தில் ஆய்வுக் கூட்டம் ஒன்று நடைபெற்றது.
ரூ.2 லட்சம் வழங்குவதாக அறிவிப்பு
ஏற்பட்ட விபத்திற்கு அவரது இரங்கலை தெரிவித்ததையடுத்து, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும் என்றும் வெளியுறவுத் துறை இணை அமைச்சர், உடனடியாக குவைத்துக்குச் சென்று நிவாரண நடவடிக்கைகளை மேற்பார்வையிடவும், இறந்தவர்களின் உடல்களை விரைவாகத் திருப்பி அனுப்ப தேவையான நடவடிக்கை நடக்க வேண்டும் என அறிவிறுத்தியுள்ளார்.
உயிரிழந்த இந்தியர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார்.
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங், பிரதமரின் முதன்மை செயலாளர் பிரமோத் குமார் மிஸ்ரா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவுத்துறை செயலாளர் வினய் குவாத்ரா என பலரும் இந்த கலந்துரையாடலில் கலந்துக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |