மும்பை அணியால் தான் இது எல்லாம் சாத்தியமானது! லசித் மலிங்கா உருக்கம்
இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான மலிங்கா மும்பை அணியால் தான் தனக்கு உலகெங்கிலும் நிறைய ரசிகர்கள் கிடைத்ததாக உருக்கமுடன் கூறியுள்ளார்.
உலக கிரிக்கெட் அரங்கில் யார்க்கர் மன்னன் என்று அழைக்கப்படும், இலங்கை அணி வீரர் லசித் மலிங்கா சமீபத்தில், அனைத்துவிதமான டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
இந்நிலையில், இவர் ஐபிஎல் தொடர் குறித்தும், மும்பை இந்தியன்ஸ் அணிக்குள் தான் எப்படி நுழைந்தேன் என்பது குறித்தும், பிரபல வலைத்தளமான மும்பை இந்தியன்ஸ் பக்கத்தில் பேட்டி அளித்துள்ளார்.
அதில், தான் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய போது தான் இந்தியா மற்றும் உலகெங்கிலும் நிறைய ரசிகர்கள் கிடைத்ததாக கூறியுள்ளார்.
கடந்த 2008-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில், மும்பை அணிக்காக விளையாட வாய்ப்பு கிடைத்தது. ஏனெனில் நான் அப்போது தான் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அனுபவம் பெற்று மூன்றரை ஆண்டுகளே ஆகியிருந்தது.
மும்பை அணிக்கு விளையாடுவதன் மூலம் நிறைய அனுபவம் வாய்ந்த வீரர்கள் உள்ளதால், இது தேசிய அணிக்கு நான் விளையாட நல்ல ஒரு அனுபவமாக இருக்கும் என்று நினைத்தேன்.
ஆனால், அந்த ஆண்டு எனக்கு துரதிர்ஷ்டவசமான ஆண்டாக மாறியது. அந்த ஆண்டு எனக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டது.
இதனால் அந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடும் வாய்ப்பை இழந்தேன், அதைத் தொடர்ந்து தேசிய அணிக்கான இலங்கை வருடாந்திர ஒப்பந்தத்தையும் இழந்தேன். அதன் பின் 2009-ஆம் ஆண்டு ஒன்றரை ஆண்டுகளுக்கு பின் மருத்துவர்கள் என்னை விளையாடலாம் என்று கூறினர்.
அப்போது அவர்கள் என்னை குறுகிய வடிவிலான கிரிக்கெட்டிலே விளையாடும் படி ஆலோசனை தெரிவித்தனர். ஆனால், நான் எதிர்பார்த்தது போன்று எனக்கு அப்போது தேசிய அணியில் இடம் கிடைக்கவில்லை, எனக்கு அந்த சமயம் ஒரே ஒரு வழி தான் இருந்தது.
அந்த ஆண்டு தென் ஆப்பிரிக்காவிற்கு சென்று ஐபிஎல் விளையாட முடிவெடுத்தேன். அங்கு நான் சிறப்பாக விளையாடினேன், அதன் பின்பு அணிக்கு திரும்பினேன், சாதித்தேன் என்று உருக்கமுடன் கூறியுள்ளார்.
ரஷ்யாவில் பயங்கரம்! பல்கலைக்கழகம் ஒன்றில் பயங்கர துப்பாக்கிச் சூடு: மாணவர்கள் ஜன்னல் வழியே குதித்து தப்பிக்கும் பதறவைக்கும் காட்சி