24 மணி நேரத்தில் மட்டும்..!மொத்தமாக உக்ரைனில் கொல்லப்பட்ட ரஷ்ய வீரர்கள் எண்ணிக்கை
போர் நடவடிக்கையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 480 ரஷ்ய வீரர்கள் உக்ரைனிய ஆயுதப் படையால் சுட்டுக் கொல்லப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொல்லப்பட்ட ரஷ்ய வீரர்கள்
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தொடங்கி கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் கடந்து விட்ட நிலையிலும், போர் நிறைவடைவதற்கான எத்தகைய அறிகுறிகளும் வெளிப்படவில்லை.
இந்நிலையில், போர் தொடங்கியதில் இருந்து இதுவரை மொத்தமாக 2,45,700 ரஷ்ய வீரர்கள் உக்ரைனிய ஆயுதப் படை வீரர்களால் கொல்லப்பட்டு இருப்பதாக உக்ரைன் இராணுவ ஜெனரல் சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.
getty
மேலும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 480 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டு இருக்கலாம் என கணிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள்
கொல்லப்பட்ட ராணுவ வீரர்களுடன் சேர்த்து உக்ரைனில் தாக்குதலுக்காக களமிறக்கப்பட்ட ரஷ்ய போர் ஆயுதங்களும் வாகனங்களும் உக்ரைனிய படைகளால் தாக்கி அழிக்கப்பட்டுள்ளது.
சிதைக்கப்பட்ட மற்றும் கைப்பற்றபட்ட ஆயுதங்களின் முறையே, 14 ரஷ்ய டாங்கிகள், 11 கவச வாகனங்கள், 9 பீரங்கிகள், 1 விமான எதிர்ப்பு போர் அமைப்பு, 4 தந்திரோபாய ஆளில்லா வான்வழி வாகனங்கள், 28 டிரக்குகள் மற்றும் 1 யூனிட் சிறப்புப் படைகளை கைப்பற்றி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
EPA
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |