ஏர் இந்தியா விமான விபத்தில் பலியான பிரித்தானியர்கள் யார் யார்? வெளியாகியுள்ள விவரங்கள்
நேற்று நடந்த ஏர் இந்தியா விமான விபத்தில் பலியான பிரித்தானியர்கள் குறித்த விவரங்கள் வெளியாகிவருகின்றன.
பலியான பிரித்தானியர்கள் யார் யார்?
விமானத்தில் 53 பிரித்தானியர்கள் பயணித்த நிலையில், அவர்களில் ஒருவர் மட்டும் உயிர் பிழைத்துள்ளார்.
அஜய்குமார் ரமேஷ் (35)மற்றும் விஸ்வாஷ்குமார் (40) என்னும் இரண்டு சகோதரர்கள் விமானத்தில் பயணித்த நிலையில், விபத்தில் விஸ்வாஷ்குமார் ஆச்சரிய விதமாக உயிர் பிழைக்க, அஜய்குமார் உயிரிழந்துவிட்டதாக அஞ்சப்படுகிறது.
மேலும், இந்தியாவுக்கு விடுமுறைக்கு வந்த Akeel Nanawaba (36), அவரது மனைவியான Hanna Vorajee (30) மற்றும் தம்பதியரின் மகளான சாரா (6) ஆகியோர் மீண்டும் பிரித்தானியாவுக்கு திரும்பமுடியாமல் போய்விட்டது.
உயிரிழந்தவர்களில் மற்றொரு குடும்பம், Javed Ali Syed, அவரது மனைவியான Mariam மற்றும் தம்பதியரின் பிள்ளைகளான Amani (4), மற்றும் Zayn ஆகியோர்.
Raxa Modha (55) என்னும் பெண், உடல் நலம் பாதிக்கப்பட்ட தனது கணவரான கிஷோர் தனது இறுதி நாட்களை தான் பிறந்த நாட்டில் செலவிட விரும்பியதால் இந்தியா சென்றுள்ளார்.
கிஷோர் சமீபத்தில் மரணமடைய, Raxa தனது பேரனான Rudra (2) மற்றும் மருமகள் Yasha Kamdarஉடன் மீண்டும் பிரித்தானியா புறப்பட்ட நிலையில், அவர்களில் யாரும் உயிருடன் பிரித்தானியா சென்றடையவில்லை.
மேலும், Wellness influencersஆன Fiongal மற்றும் Jamie Greenlaw-Meek என்பவர்கள் இந்தியாவுக்கு சுற்றுலா சென்றுள்ளார்கள். அத்துடன் இந்தியா சென்ற சகோதரிகளான Dhir மற்றும் Heer Baxi ஆகியோர், என இவர்கள் அனைவருமே விமான விபத்தில் உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |