ரூ.1,470 கோடி லொட்டரி வென்ற பெண் - பாதி தொகையை தானமாக வழங்கினார்
Lottery winner donates half fortune: லொட்டரியில் வென்ற ரூ.1,470 கோடியில் பாதியை தானமாக வழங்கிய பெண்ணை பற்றி இங்கே பார்க்கலாம்.
EuroMillions லொட்டரியில் 115 மில்லியன் பவுண்டு
பிரித்தானியாவில் பிரான்சிஸ் கொனொலி (Frances Connolly) என்ற பெண், 2019-இல் தனது கணவர் Paddy Connolly--யுடன் சேர்ந்து EuroMillions லொட்டரியில் 115 மில்லியன் பவுண்டுகள் (சுமார் ரூ.1,470 கோடி) வென்றார்.
மிகப்பெரிய சந்தையாக உருவெடுக்கும் சொகுசு பதுங்குகுழிகள் - 2035-க்குள் 10 பில்லியன் டொலர் மதிப்பை எட்டும்
ஆனால், அந்த பெரும் செல்வத்தை தனக்காக மட்டும் வைத்துக்கொள்ளாமல், அவர் அதில் பாதியை சமூக நலத்திற்காக தானமாக வழங்கியுள்ளார்.
பிரான்சிஸ், சமூகப்பணியாளராகவும் ஆசிரியராகவும் இருந்தவர். “என் குடும்பத்தின் அடிப்படை தேவைகள் பூர்த்தியாகிய பிறகு, செல்வத்தை பகிர்வது மனித இயல்பாகவே தோன்றியது” என அவர் கூறியுள்ளார்.

ரூ.632.5 கோடி தானம்
Dolly Parton-ன் தானதர்ம பணிகள் அவருக்கு ஊக்கமாக இருந்ததாகவும் தெரிவித்தார்.
115 மில்லியன் பவுண்டுகளில், சுமார் ரூ.632.5 கோடி மதிப்புள்ள தொகையை அவர் பல்வேறு சமூக நலத்திட்டங்களுக்கு வழங்கியுள்ளார். இதற்காக, PFC Trust என்ற அறக்கட்டளையையும் நிறுவியுள்ளார்.
அவரது வாழ்க்கை முறையில் பெரும் மாற்றம் இல்லை. “நாங்கள் முன்பே வாழ்ந்த வாழ்க்கையை, இப்போது சிறிது பெரிய அளவில் வாழ்கிறோம்” என Frances கூறுகிறார். அவர்கள் இன்னும் பழைய வாட்ச்கள், கார்கள் போன்றவற்றை விரும்பி வாங்குகின்றனர். தேவையற்ற ஆடம்பரத்தை தவிர்க்கின்றனர்.
60-வது பிறந்தநாள்
பிரான்சிஸ், “மனிதர்களுக்கு ‘போதும்’ என்ற அளவு வேறுபடும். ஆனால், குழந்தைகள் நிம்மதியாக வாழும் அளவு கிடைத்த பிறகு, மீதியை பகிர்வது சரியானது” எனக் கூறியுள்ளார்.
அவரது 60-வது பிறந்தநாளை முன்னிட்டு, பல்வேறு விளையாட்டு வீரர்கள் PFC Trust-க்கு நிதி திரட்டும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளனர்.
வடக்கு அயர்லாந்தில் பிறந்த பிரான்சிஸ், சிறுவயதிலிருந்தே பிறருக்கு உதவியவர். பின்னர் Hartlepool நகரில் குடியேறி, அங்கு 25 ஆண்டுகளுக்கும் மேலாக சமூக சேவையில் ஈடுபட்டார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |