ஈரானில் 3 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பிரெஞ்சு ஜோடியை விடுவிக்க மேக்ரான் வலியுறுத்தல்
மூன்றாண்டுகளாக ஈரானில் சிறையில் வாடும் பிரெஞ்சு ஜோடியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் கடுமையாக வலியுறுத்தியுள்ளார்.
2022 மே மாதம் ஈரான் பயணத்தில் இருந்த போது கைது செய்யப்பட்ட செசில் கோலர் (Cecile Kohler) மற்றும் ஜாக் பாரிஸ் (Jacques Paris) ஆகியோருக்கு ஈரான் அரசு உளவு பார்த்ததாக குற்றச்சாட்டு சுமத்தியுள்ளது.
ஆனால் அவர்களின் குடும்பத்தினர் இது தவறான மற்றும் மனிதாபிமானமற்ற கைது எனக் கூறுகிறார்கள்.
X தளத்தில் வெளியிட்ட பதிவில், மேக்ரான், ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் உடன் உரையாடியதைக் குறிப்பிடுகிறார். இதில் அவர், "அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அநியாயமானவை. அவர்கள் பிரான்ஸுக்கு உடனடியாக திருப்பி அனுப்பப்பட வேண்டும்" என வலியுறுத்தினார்.
மேலும், மேக்ரான், ஈரானின் அணுஆயுத திட்டம் தொடர்பான அக்கறையையும் தெரிவித்தார். "ஈரான் அணுஆயுதம் பெறக் கூடாது. அதன் நோக்கங்கள் அமைதிக்கே உரியது என்பதற்கான முழுமையான உறுதிப்பத்திரங்கள் தேவை" என அவர் தெரிவித்துள்ளார்.
இவர்கள் தற்போது தெஹ்ரான் இவின் சிறையின் 209 பிரிவில் அடைக்கலத்தில் இருக்கின்றனர். பிரான்ஸ் அரசு இவர்களை “state hostages” என சுட்டிக்காட்டியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் இவ்வாறான மனித உரிமை மீறல்களை கண்டித்து கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் நாடாளுமன்றம் முடிவெடுத்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Macron Iran French couple, Cecile Kohler Jacques Paris, France Iran espionage case, French citizens detained Iran, Iran Evin prison French nationals, Iran France hostage situation, Macron nuclear deal Iran, Iran EU detainees issue, European Parliament Iran resolutions, Iran political prisoners France