ஸ்வீடன் தேர்தல்: நூலிழையில் தோல்வியை தழுவியது பிரதமர் மக்டலேனா ஆண்டர்சனின் ஆளும் கட்சி
பிரதமர் ஆண்டர்சனின் ஆளும் மைய-இடதுசாரி கூட்டணி தேர்தலில் தோல்வி.
ஸ்வீடனில் நூலிழையில் பெரும்பான்மை பெற்ற வலதுசாரி கூட்டணி கட்சி.
ஸ்வீடனில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தலில் பிரதமர் மக்டலேனா ஆண்டர்சனின்(Magdalena Andersson) மைய-இடது கூட்டணி, வலதுசாரி கூட்டணியிடம் தோல்வியை தழுவியது.
நார்டிக் நாடான ஸ்வீடனில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தலில் பிரதமர் மக்டலேனா ஆண்டர்சனின் மைய-இடது கூட்டணி 173 இடங்களை மட்டுமே கைப்பற்றி வலதுசாரி கூட்டணியிடம் தோல்வியை தழுவியுள்ளது.
GETTY
99 சதவிகித வாக்குகள் எண்ணப்பட்டு இருக்கும் நிலையில் வலதுசாரி கட்சி கூட்டணி மொத்தம் 176 இடங்களை பெற்று பெரும்பான்மையை அடைந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து நாட்டின் புதிய அரசாங்கத்தை மிதவாதக் கட்சியின் தலைவர் உல்ஃப் கிறிஸ்டெர்சன்(Ulf Kristersson) அமைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்வீடன் நாட்டின் வழக்கப்படி வாக்கு மறு எண்ணிக்கைக்கு பிறகே, இறுதி முடிவு உறுதிப்படுத்தப்படும் நடைமுறை கடைப்பிடிக்கப்படுகிறது.
இருப்பினும் புதன்கிழமை அன்று செய்தியாளர்களை சந்தித்த ஆண்டர்சன் தனது தோல்வியை ஏற்றுக் கொண்டு வியாழக்கிழமை அதிகாரப்பூர்வமாக ராஜினாமா செய்வதாக தெரிவித்தார்.
BBC
மேலும் நாடாளுமன்றத்தில், அவர்களுக்கு ஒன்று அல்லது இரண்டு இடங்களே சாதகமாக உள்ளன, இது ஒரு மெல்லிய பெரும்பான்மை, எப்படி இருப்பினும் அது ஒரு பெரும்பான்மை என தெரிவித்தார்.
கூடுதல் செய்திகளுக்கு: மன்னர் மூன்றாம் சார்லஸ் ஆட்சியின் கீழ் பிறந்த முதல் பிரித்தானிய குழந்தை: தலையில் சூட்டப்பட்ட நீல கிரிடம்
மக்டலேனா ஆண்டர்சன் கடந்த ஆண்டு பதவியேற்றபோது நோர்டிக் நாட்டின் முதல் பெண் பிரதமராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.