இந்த 30 நாள்களுக்கு விசா தேவையில்லை.., இந்தியர்களுக்கு சலுகை அளித்த மற்றுமொரு நாடு
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான மலேசியாவில் சீனா மற்றும் இந்தியாவை சேர்ந்தவர்கள் டிசம்பர் 1 முதல் 30 -ம் தேதி வரை தங்குவதற்கு விசா தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலேசியா
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான மலேசியாவில் இந்தியர்கள் உள்பட பல்வேறு நாட்டினர் அடிக்கடி சுற்றுலா செல்வது வழக்கம். குறிப்பாக, முக்கிய சுற்றுலா தளம் என்ற இடத்தில் மலேசியாவும் உள்ளது.
கடந்த ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை 9.16 மில்லியன் பேர் மலேசியாவுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அதில், சீனாவில் இருந்து 4,98,540 பேரும், இந்தியாவில் இருந்து 2,83,885 பேரும் உள்ளனர்.
விசா தேவையில்லை
இந்நிலையில், மலேசியா தங்களது நாட்டிற்கு சுற்றுலா வருபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அந்தவகையில், சீனா மற்றும் இந்தியாவில் இருந்து வருபவர்கள் தங்கள் நாட்டிற்கு வருவதற்கு விசா தேவையில்லை என மலேசியா அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பை மக்கள் நீதி கட்சியின் கூட்டத்தில் பிரதமர் அன்வர் இப்ராஹிம் வெளியிட்டார். அப்போது, அவர் எவ்வளவு நாள்களுக்கு இந்த அனுமதி வழங்கப்படும் என்று தெளிவாக குறிப்பிடவில்லை.
இருப்பினும், சீனா மற்றும் இந்தியாவை சேர்ந்தவர்கள் டிசம்பர் 1 முதல் 30 -ம் தேதி வரை தங்குவதற்கு விசா தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக, மலோசியாவின் 5 -வது மிகப்பெரிய சந்தையாக இந்தியாவும், 4 -வது இடத்தில் சீனாவும் உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |