கீழே கிடந்த நாணயங்களை சேகரித்து TV வாங்கிய பிரபலம்.., சுவாரஸ்யமான சம்பவம்
கடற்கரைகள் மற்றும் பூங்காக்களில் இருந்து கண்டெடுக்கப்பட்ட நாணயங்களை சேகரித்து நபர் ஒருவர் டிவி வாங்கிய சம்பவம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாணயங்கள் சேகரிப்பு
சிலி நாட்டில் டிக்டாக் பிரபலம் லூயிஸ் அல்வெரெஸ் (Luis Alvarez) என்பவர் கடற்கரைகள் மற்றும் பூங்காக்களில் இருந்து கண்டெடுத்த நாணயங்களை சேகரித்துள்ளார்.
அவர் மெட்டல் டிடெக்டர் (Metal detector) மூலம் 7 நாட்களாக நாணயங்களை சேகரித்து வந்துள்ளார். அவர் சேகரித்த பணத்தின் மதிப்பு ரூ.17,000 ஆகும்.இதனை வைத்து லூயிஸ் டிவி ஒன்றை வாங்கியுள்ளார்.
இது தொடர்பாக லூயிஸ் அல்வெரெஸ் கூறும்போது, "கடற்கரைகள் மற்றும் பூங்காக்களில் இருந்து ஒவ்வொரு வாரமும் எனக்கு 210 அமெரிக்க டொலர் முதல் 263 டொலர் வரை கிடைக்கும்.
என்னுடைய மகளுக்கு டிவி ஒன்று வாங்க வேண்டியிருந்தது. நான் சேகரித்த நாணயங்களை இரவு முழுவதும் சுத்தம் செய்தேன்.
ஆனால், நேரமாகிவிட்டதால் வங்கிக்கு செல்ல முடியவில்லை. இதனால், நாணயங்களை சிறிய பையில் எடுத்து வைத்துச் சென்றேன்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |