காட்டுக்குள் தப்பிய மக்கள்... கூட்டு வன்முறையை எதிர்கொண்ட பெண்கள்: இருவரல்ல 8 பேர்கள்

Crime Death Manipur
By Arbin Jul 21, 2023 10:35 AM GMT
Report

இந்திய மாநிலம் மணிப்பூரில் பெண்கள் இருவரை ஆடைகள் இல்லாமல் ஊர்வலம் நடத்திய சம்பவம் நாடும் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த வெறிபிடித்த குழுவினரிடம் சிக்கியது இருவரல்ல 8 பெண்கள் என்ற பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

8 பெண்கள் கூட்டு துஸ்பிரயோகம்

தொடர்புடைய சம்பவம் மே மாத முதல் வாரத்தில் நடந்துள்ளதாக நேரில் பார்த்த ஒருவர் தற்போது அம்பலப்படுத்தியுள்ளார்.

காட்டுக்குள் தப்பிய மக்கள்... கூட்டு வன்முறையை எதிர்கொண்ட பெண்கள்: இருவரல்ல 8 பேர்கள் | Manipur Violence Eight Women Were Assaulted @pti

முகாம் ஒன்றில் தஞ்சமடைந்துள்ள பெண் ஒருவர் நூலிழையில் அந்த குழுவினரிடம் இருந்து தப்பியதாகவும், மொத்தம் 8 பெண்கள் கூட்டு துஸ்பிரயோகத்திற்கு இலக்காகி, தெருவில் ஆடைகள் இல்லாமல் ஊர்வலம் நடத்தப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தை தடுக்க முயன்ற அவரது கணவர், சகோதரர் மற்றும் அவரது மகன் ஆகியோர் அந்த வன்முறை குழுவினரால் அடித்தே கொல்லப்பட்டதாகவும் குறித்த பெண் தெரிவித்துள்ளார்.

40 வயதான அந்த பெண் மணிப்பூரின் காங்போக்பி மாவட்டத்தில் உள்ள பிபின்யம் கிராமத்தை சேர்ந்தவர். மே 3ம் திகதி கலவரம் தொடங்கிய மாலை நேரம், வன்முறை குழு ஒன்று பிபின்யம் கிராமத்தை முற்றுகையிட்டுள்ளது.

பிபின்யம் கிராமமானது குகி பூர்வகுடி மக்கள் அதிகம் வாழும் பகுதியாகும். குடியிருப்புகளுக்கு நெருப்பு வைத்த குழு, கிராம மக்களை கொடூரமாக தாகவும் தொடங்கியுள்ளது. இதனையடுத்து வனப்பகுதிக்கு மக்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

தெருவில் ஊர்வலமாக நடத்தியுள்ளனர்

பகல் விடிந்ததும், அந்த வன்முறை குழு கிராமத்தில் இருந்து வெளியேறியிருக்கும் என நம்பி, திரும்பி வந்த கிராம மக்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. மறுபடியும் கிராமத்திற்கு திரும்பிய அந்த குழு தமது கணவரின் சகோதரர், அவரது மகன் மற்றும் 8 பெண்களை கடத்தி சென்று, வனப்பகுதியில் வைத்து கூட்டு வன்கொடுமைக்கு இரையாக்கியுள்ளது.

காட்டுக்குள் தப்பிய மக்கள்... கூட்டு வன்முறையை எதிர்கொண்ட பெண்கள்: இருவரல்ல 8 பேர்கள் | Manipur Violence Eight Women Were Assaulted @nea

பின்னர் அந்த 8 பெண்களையும் ஆடைகள் இல்லாமல் தெருவில் ஊர்வலமாக நடத்தியுள்ளனர். மட்டுமின்றி, தமது உறவினர்களான ஆண்கள் இருவரையும் இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்துள்ளதாகவும் குறித்த பெண் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த வன்முறை சம்பவங்களுக்கு பொலிசாரும் அனுமதி அளித்ததாகவே பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும், தாக்குதலில் ஈடுபட்ட ஆண்களில் ஒருவர், பாதிக்கப்பட்ட பெண்ணின் நண்பரின் சகோதரர் எனவும், வன்முறையில் ஈடுபட்ட பெரும்பாலானோரை அடையாளம் தெரியும் எனவும் தொடர்புடைய பெண் தெரிவித்துள்ளார்.

மே 18ம் திகதி இந்த விவகாரம் தொடர்பில் வழக்கு பதியப்பட்டும், எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை எனவும், ஆனால் இரு பெண்கள் தொடர்பான காணொளி நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்திய பின்னரே, கைது நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

கொழும்பு

11 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Scarborough, Canada

11 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வெள்ளவத்தை

12 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, கரவெட்டி, Montreal, Canada, திருகோணமலை

12 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

09 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, London, United Kingdom

12 Sep, 2010
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு, London, United Kingdom

13 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்.பாஷையூர், Jaffna, பிரான்ஸ், France

10 Sep, 2010
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Brisbane, Australia, Harrow, United Kingdom

06 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கிளாலி

11 Sep, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Warwick, England, United Kingdom

03 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US