ஆயிரம் டன் எரிபொருளுடன் கடலில் மூழ்கிய கப்பல்! காரணத்தை கூறிய அமைச்சர்
வட ஆப்பிரிக்கா நாடான துனிசியாவில் 1000 டன் எரிபொருளுடன் சரக்கு கப்பல் ஒன்று கடலில் மூழ்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளிக்கிழமை ஈக்வடோரியல் கினியாவிலிருந்து மால்டாவுக்கு சென்றுக் கொண்டிருந்த எரிபொருள் சரக்கு கப்பல் துனிசியாவின் கேப்ஸ் கடலில் மூழ்கியதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கேப்ஸ்-ல் இருந்து 7 மைல் தொலைவில் இருக்கும் போது 1000 டன் எரிபொருளை ஏற்றி வந்த கப்பலில் இருந்து உதவி கோரி சிக்னல் அனுப்பப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து துனிசியா கடற்படை மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கப்பலில் இருந்த ஏழு பேரையும் கடற்படையினர் மீட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
உக்ரைனுக்கு சிறப்பு படைகளை அனுப்பிய பிரித்தானியா! போட்டுடைத்த உக்ரேனிய தளபதி
இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு மோசமான வானிலை தான் காரணம் என சுற்றுச்சழல் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கடல் நீர் கப்பலுக்குள் புகுந்து 2 மீட்டர் உயரத்தை எட்டியதாக அமைச்சர் கூறியுள்ளார்.
மேலும், சுற்றுச்சுழல் பேரழிவை தவிர்க்க மற்றும் விளைவுகளை குறைக்க அதிகாரிகள் பணியாற்றி வருவதாக அமைச்சம் தெரிவித்துள்ளது.