கடத்தப்பட்ட மெக்சிகோ இசைக்குழு உறுப்பினர்கள்..டெக்ஸாஸ் எல்லையில் இறந்துகிடந்ததால் அதிர்ச்சி
மெக்சிகோவைச் சேர்ந்த இசைக்குழு உறுப்பினர்கள் ஐந்து பேர், டெக்ஸாஸ் எல்லையில் இறந்து கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இசைக்குழு
Grupo Fugitivo என்ற மெக்சிகோ இசைக்குழுவைச் சேர்ந்த இசைக்கலைஞர்கள், கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் காணாமல் போனதாகக் கூறப்படுகிறது.
அன்றைய தினம் இரவு 10 மணியளவில், அவர்கள் சென்ற SUV கார் கடத்தப்பட்டதாக தமௌலிபஸ் மாநில வழக்கறிஞர்கள் கூறினர்.
செவ்வாய்க்கிழமை அன்று காணாமல் போன கார் கண்டுபிடிக்கப்பட்டது, ஆனால் வன்முறைக்கான எந்த அறிகுறிகளையும் காட்டவில்லை.
இறந்து கிடந்த இசைக்கலைஞர்கள்
இந்த நிலையில், டெக்சாஸ் எல்லையில் உள்ள வடக்கு நகரமான ரெய்னோசாவில் காணாமல் போன நான்கு இசைக்குழு உறுப்பினர்கள் அவர்களின் மேலாளர் என ஐந்து பேரும் இறந்து கிடந்துள்ளனர்.
அவர்கள் பிரான்சிஸ்கோ வாஸ்குவெஸ் (20), விக்டர் கார்ஸா (21), ஜோஸ் மோரலெஸ் (23) மற்றும் நெமேசியோ டுரான் (40) மற்றும் குழுவின் மேலாளராகவும், புகைப்படக் கலைஞராகவும் இருந்த 27 வயதான லிவன் சோலிஸ் என அடையாளம் காணப்பட்டனர்.
இதுதொடர்பாக, ரெய்னோசாவில் வலுவான இருப்பைக் கொண்ட வளைகுடா கார்டெல்லின் ஓவர் பிரிவான லாஸ் மெட்ரோஸைச் சேர்ந்ததாக நம்பப்படும் 9 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக தமௌலிபஸ் வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலும், அவர்களிடம் இருந்து இரண்டு வாகனங்கள் மற்றும் இரண்டு துப்பாக்கிகளை பொலிசார் பறிமுதல் செய்தனர்.
இசைக்குழுவினர் ஏன் கொல்லப்பட்டனர் என்பதை அதிகாரிகளால் உடனடியாக கூற முடியவில்லை, மேலும் உடல்கள் எரிக்கப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளை மறுக்கவும் இல்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |