பாகிஸ்தான் அணியில் பாபர் அஸாமிற்கு இடம்; ரிஸ்வானுக்கு இல்லை..தலைமை பயிற்சியாளர் கூறிய காரணம்
உலகக்கிண்ணத்தை கருத்தில் கொண்டு அணியின் வீரர் குழுவை விரிவுபடுத்த வேண்டியது அவசியமாகிறது என பாகிஸ்தான் பயிற்சியாளர் தெரிவித்தார்.
பாகிஸ்தான் அணி
அவுஸ்திரேலியாவிற்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டது.

அதில் அனுபவ வீரரான பாபர் அஸாம் (Babar Azam), அப்ரார் அகமது, ஷதாப் கான், இளம் வீரர் மாஸ் சதாகத் போன்ற வீரர்கள் இடம்பெற்றிருந்தனர்.
அணித்தலைவராக ஷாஹீன் ஷா அப்ரிடியும், துணைத்தலைவராக சல்மான் அலி அஹாவும் இடம்பெற்றிருந்தனர். ஆனால் விக்கெட் கீப்பர் மொஹம்மது ரிஸ்வானின் பெயர் இடம்பெறவில்லை.
வங்காளதேசத்திற்கு எதிராக டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் இழந்ததைத் தொடர்ந்து இந்த அணி அறிவிப்பு வெளியானது.
பயிற்சியாளர் மைக் ஹெஸ்ஸன்
அணித்தேர்வு குறித்து பாகிஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளர் மைக் ஹெஸ்ஸன் கூறுகையில், "ஒருநாள் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை, குறிப்பாக ஒன்றரை ஆண்டுகளில் வரவிருக்கும் உலகக்கிண்ணத்தை மனதில் கொண்டு பார்க்கையில் நாம் அணியின் வீரர் குழுவை விரிவுபடுத்த வேண்டியது அவசியமாகிறது.
எனவே, எப்போதும் அதே வீரர்களே மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு பதிலாக, தற்போதைய ஒருநாள் அணித் தேர்வு செயல்முறையானது இன்னும் முழுமைபெறும் நிலையில் உள்ளது.
மேலும், நாங்கள் மேம்படுத்த வேண்டிய பல விடயங்கள் அணியில் உள்ளன. ஒன்றரை ஆண்டுகளில் உலகக்கிண்ணத் தொடர் வரும்போது, எங்களிடம் உண்மையில் மிகச்சிறந்த அணி இருப்பதை நாங்கள் உறுதி செய்துகொள்ள வேண்டும்" என தெரிவித்தார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |