வெளிநாடு சுற்றுலா சென்ற இந்திய இளம்பெண் கடலில் மூழ்கினாரா? கிடைத்துள்ள தடயம்
வெளிநாடு சுற்றுலா சென்ற இந்திய இளம்பெண் ஒருவர் மர்மமான முறையில் மாயமாகியுள்ள நிலையில், அவர் கடலில் மூழ்கியிருக்கலாம் என பொலிசார் சந்தேகம் தெரிவித்திருந்தார்கள்.
இந்நிலையில், அவர் அணிந்திருந்த உடை ஒன்றும், அவரது காலணிகளும் கிடைத்துள்ளதால், சந்தேகம் அதிகரித்துள்ளது.
வெளிநாட்டில் இந்திய இளம்பெண் மாயம்
அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் பல்கலையில் பயின்றுவந்தவர் இந்திய வம்சாவளியினரான சுதிக்ஷா (Sudiksha Konanki, 20) என்னும் இளம்பெண்.
சுதிக்ஷா தனது சக மாணவ மாணவியர் ஐந்து பேருடன் டொமினிக்கன் குடியரசுக்கு சுற்றுலா சென்றிருந்த நிலையில், வியாழக்கிழமை அதிகாலை 4.50 மணியளவில் தாங்கள் தங்கியிருந்த ஹொட்டலின் அருகிலுள்ள கடற்கரையில் கடைசியாக காணப்பட்டுள்ளார்.
அதற்குப் பிறகு அவர் மாயமாகிவிட்டார்.
இளைஞர் மீது சந்தேகம்
புதன்கிழமை இரவு, சுதிக்ஷா, ஆறு பேருடன் அந்த கடற்கரைக்குச் சென்றிருந்த நிலையில், அவர்களில் ஐந்து பேர் தாங்கள் தங்கியிருந்த ஹொட்டலுக்குத் திரும்ப, சுதிக்ஷாவும் ஜோஷுவா (Joshua Stevem Ribe, 24) என்னும் இளைஞரும் மட்டும் கடற்கரையிலேயே இருந்துள்ளார்கள்.
ஜோஷுவா, தான் குடிபோதையில் இருந்ததாக தெரிவித்ததுடன், சுதிக்ஷாவிடம் அவர் ஓகேவா என்று கேட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலதிக விசாரணையில், தான் கடைசியாக சுதிக்ஷாவைப் பார்க்கும்போது அவர் முழங்கால் அளவு நீரில் கடலுக்குள் நின்றதாகவும் கூறியுள்ளார்.
பின்னர், தான் போதையில் தூங்கிவிட்டதாகவும், தான் தூங்கும் முன் சுதிக்ஷா கடற்கரையில் நடந்து செல்வதை பார்த்ததாகவும் கூறியுள்ளார் ஜோஷுவா.
இப்படி அவர் மாற்றி மாற்றி பேசுவதால், அவர் மீது சந்தேகம் வலுத்துள்ளது.
ஆகவே, அவரது பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்துள்ள பொலிசார், விசாரணை முடியும் வரை அவர் நாட்டைவிட்டு வெளியேற அனுமதி மறுத்துள்ளதுடன், அவரை தீவிர கண்காணிப்பிலும் வைத்துள்ளார்கள்.
கிடைத்துள்ள முக்கிய தடயம்
இதற்கிடையில், சுதிக்ஷா கடைசியாக CCTVயில் காணப்பட்டபோது தன் உடையின்மேல் அணிந்திருந்த sarong என்னும் உடை கடற்கரையிலுள்ள ஒரு சாய்வு நாற்காலியிலும், அவரது காலணிகள் அந்த நாற்காலிக்குக் கீழேயும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ஆகவே, முன்னர் பொலிசார் சந்தேகப்பட்டதுபோலவே சுதிக்ஷா கடலில் மூழ்கியிருக்கலாமோ என்னும் சந்தேகமும் அதிகரித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |