சுலோவாகியா பிரதமர் மீதான துப்பாக்கிச்சூட்டை வன்மையாக கண்டிக்கிறேன் - நரேந்திர மோடி
சுலோவாகியா பிரதமர் மீதான துப்பாக்கிச்சூடு சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
சுலோவாகியா பிரதமர் ராபர்ட் ஃபிகோ (Robert Fico) மீதான துப்பாக்கிச்சூடு தாக்குதல் சம்பவத்திற்கு உலக நாடுகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ராபர்ட் ஃபிகோவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் விரைவில் குணமடைவார் என்றும் துணை பிரதமர் டோமஸ் தாராபா கூறினார்.
இந்த நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
அவரது பதிவில், ''சுலோவாகியா பிரதமர் H.E.Mr.ராபர்ட் ஃபிகோ மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். இந்த கோழைத்தனமான மற்றும் கொடூரமான செயலை நான் வன்மையாக கண்டிக்கிறேன் மற்றும் பிரதமர் ஃபிகோ விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன். சுலோவாகியா குடியரசின் மக்களுடன் இந்தியா ஒற்றுமையாக நிற்கிறது'' என தெரிவித்துள்ளார்.
Deeply shocked at the news of the shooting at Slovakia’s Prime Minister, H.E. Mr. Robert Fico. I strongly condemn this cowardly and dastardly act and wish PM Fico a speedy recovery. India stands in solidarity with the people of the Slovak Republic.
— Narendra Modi (@narendramodi) May 16, 2024
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |