மொஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறார்., ஆனால் கடுமையாக காயம்: இந்திய உளவுத்துறை தகவல்
ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி உயிருடன் இருப்பதாகவும், ஆனால் கடுமையாக காயமடைந்துள்ளதாகவும் இந்திய உளவுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
அவரது உடல்நிலை காரணமாக, நேரடி தொடர்பு முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டு, Revolutionary Guards மூலம் மட்டுமே செய்தி பரிமாற்றம் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா-ஈரான் மோதல் தீவிரமாகும் நிலையில், மொஜ்தபா கமேனியின் உடல்நிலை குறித்த குழப்பம் உலகளவில் கவலைக்குரியதாக உள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், “அவர் உயிருடன் உள்ளாரா?” என்ற கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் ஈரானின் அரசியல் நிலைப்பாடு மற்றும் எதிர்கால தலைமை குறித்து சந்தேகங்கள் எழுந்துள்ளன.

இந்திய உளவுத்துறை, “மொஜ்தபா கமேனியின் இயக்கம் மற்றும் தொடர்புகள் கடுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. அவர் நேரடியாக வெளிநாட்டு தலைவர்களுடன் பேச முடியவில்லை” என்று தெரிவித்துள்ளது.
அமெரிக்கா-இஸ்ரேல்-ஈரான் போர் நிலை
ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடியதால் உலகளவில் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் எரிசக்தி விலை உயர்வு, சர்வதேச சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
சுவிட்சர்லாந்து தனது வான்வழியை அமெரிக்க இராணுவ விமானங்களுக்கு மூடியுள்ளது.
சீனா, “இரு தரப்பும் அமைதியை பேண வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளது.
இந்நிலையில், ஈரானின் உச்ச தலைவர் கடுமையாக காயமடைந்தது, மத்திய கிழக்கு அரசியல் சூழ்நிலையை மேலும் சிக்கலாக்கும் அபாயம் உள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Mojtaba Khamenei health update, Iran Supreme Leader injured, Indian intelligence Iran report, Iran US conflict 2026 #MojtabaKhamenei #IranWar