நகரை தாக்கிய சேற்று சுனாமி! பீதியடைந்த மக்கள்.. அதிர்ச்சி வீடியோ
இத்தாலியில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் நகரமொன்றை சூழ்ந்தது மக்களை பீதியடைய செய்தது.
கனமழை வெள்ளம்
ஐரோப்பிய நாடான இத்தாலியின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள நகரம் Bardonecchia.
இங்கு பெய்த கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பல்வேறு இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டதுடன், மெர்டோவின் நதியில் சேற்று சுனாமி வெள்ளத்துடன் சேர்ந்து விட்டது.
Terrifying flash flooding in #Bardonecchia, #Italy last night. The damage is extensive and several people are missing….#ClimateActionNow pic.twitter.com/mqRdzrkMLo
— Volcaholic ? (@volcaholic1) August 14, 2023
பீதியடைந்த மக்கள்
ஆர்ப்பரித்து வந்த வெள்ளத்தைக் கண்டு மக்கள் பீதியடைந்தனர். நகரின் நடுவே ஓடும் இந்த நதியில் உண்டான சேற்று சுனாமியால் நகரம் முழுவதும் சேற்றால் பூசப்பட்டது போல் மாறியது.
எனினும் மக்கள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 120 பேர் மீட்கப்பட்டு வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் தீயணைப்புப் படையினர் வீதிகளில் சேற்றில் சிக்கிய கார்கள் உள்ளிட்ட வாகனங்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
DAPress/SplashNews.com
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |