3 விக்கெட்களை இழந்தது பாவச்செயல்! கடைசி ஓவர்களில் நடந்தது.. CSK அணியுடனான தோல்விக்கு பின் பேசிய மும்பை கேப்டன் பொலார்டு
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் சிஎஸ்கே அணியுடன் தோற்ற பின்னர் அது குறித்து மும்பை கேப்டன் பொலார்டு பேசியுள்ளார்.
ஐபிஎல் 2021 டி20 தொடரின் 30வது போட்டியில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி தழுவியது.
தோல்விக்கு பின்னர் பேசிய மும்பை இந்தியன்ஸ் கேப்டன் பொலார்டு, ருதுராஜ் உண்மையாக நன்றாகவே பேட்டிங் செய்தார். டி20 கிரிக்கெட்டில் ஒரு பேட்ஸ்மென் கடைசி வரை ஆடினால் உண்மையில் அது ஒரு அணியை பாதிக்கவே செய்யும்.
பந்து வீச்சில் கடைசி ஓவர்களை சரியாக வீசவில்லை. 20 ரன்களில் தோற்பது என்றால் கூடுதல் ரன்களைக் கொடுத்திருக்கிறோம் என்றே அர்த்தம். பிட்ச் நன்றாக இருந்தது, புதிய பந்து ஸ்விங் ஆனது.
எங்கள் வேகப்பந்து வீச்சாளர்கள் தொடக்க விக்கெட்டுகளை எடுத்தனர். அவர்கள் 150+ ரன்களை எடுத்தாலும் நாங்கள் இலக்கை எட்டியிருக்கலாம். 3 விக்கெட்டுகளை இழந்தது பாவச்செயல் என கூறியுள்ளார்.