போரில் தேவதைகள் இல்லை..உக்ரைன்-ரஷ்யா மோதலுக்கு இதுதான் முடிவு - எலான் மஸ்க்
உக்ரைனும், ரஷ்யாவும் ஒருவரையொருவர் மன்னித்து போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
உக்ரைன்-ரஷ்யா போர்
உக்ரைன் உடனான போரில் ரஷ்யாவின் வாக்னர் கூலிப்படையின் செயலால், பெலாரஸ் நாட்டுடனான எல்லைகளை மூடும் முடிவுக்கு வந்துள்ளதாக போலந்து மற்றும் லிதுவேனியா ஆகிய நாடுகள் அறிவித்தன.
இந்த நிலையில் ட்விட்டர் உரிமையாளர் எலான் மஸ்க், உக்ரைன் மற்றும் ரஷ்யா மோதல் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
இந்திய வம்சாவளியான விவேக் ராமசாமியுடனான ஊடக கலந்துரையாடலில் ஈடுபட்ட மஸ்க், உக்ரைன்-ரஷ்யா போர் குறித்து கருத்து தெரிவித்தார்.
எலான் மஸ்க் கருத்து
அவர் கூறுகையில், 'நீங்கள் வரலாற்றைப் பார்த்தால், உக்ரைன் மற்றும் ரஷ்யாவில் உள்ளவர்கள் மறுபக்கத்தை வெறுக்க ஒரு மில்லியன் காரணங்களை காணலாம். இதனால் தான் உங்களுக்கு தெரியும், மற்ற கன்னத்தை திருப்பும் கிறித்துவக் கொள்கை மிகவும் புத்திசாலித்தனமானது.
ஏனென்றால், நீங்கள் இறுதியில் உங்கள் எதிரியை மன்னிக்கவில்லை என்றால், நீங்கள் எப்போதும் பழி வாங்கும் சுழற்சியில் சிக்கிக் கொள்கிறீர்கள். சில எதார்த்தம் இருக்க வேண்டும், ரஷ்யாவை தூய பிசாசு என்றும், உக்ரைனை தூய தேவதை என்றும் முத்திரை குத்த முடியாது. ஏனெனில் போரில் தேவதைகள் இல்லை' என தெரிவித்துள்ளார்.
Chesnot / Getty Images file
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |