'நெத்திப் பொட்டிலேயே சுட்டு கொல்வோம்' நேரடியாக எச்சரிக்கை விடுத்த மியான்மர் இராணுவம்!
போராட்டங்களில் ஈடுபடுவோரை தலையிலும் முதுகிலும் சுட்டு கொல்வோம் என மியான்மரின் இராணுவ ஆட்சிக்குழு வெளிப்படையாகவே எச்சரிக்கை விடுத்துள்ளது.
மியான்மரில் பிப்ரவரி-1 ஆட்சிக்கவிழ்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மியான்மர் இராணுவத்துக்கு எதிராக அந்நாட்டு மக்கள் கிட்டத்தட்ட 2 மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இதில், போராட்டக்காரர்கள் மீது மியான்மரின் பாதுகாப்பது படையினர் தாக்குதல் நடத்தியதில் இதுவரை 320-க்கும் மேற்பட்டோர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இரு தினங்களுக்கு முன் 7 வயது சிறுமி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏறப்டுத்தியது. மேலும் பெண்கள், இளைஞர்கள், குழந்தைகள் என பாரபட்சமின்றி கொல்லப்பட்டுள்ளனர்.
கொல்லப்பட்டவர்களில் குறைந்தது 25 சதவிகிதத்தினர் தலையில் சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரியவந்துள்ளது. அவர்கள் வேண்டுமென்றே கொலை செய்ய இலக்கு வைக்கப்பட்டுள்ளனர் என்ற சந்தேகத்தை எழுப்புயுள்ளது.
இந்த நிலையில், நாட்டின் ஆயுதப்படை தினமான இன்று ஜெனரல்களுக்கு எதிராக பெரும் எதிர்ப்பைக் காட்டுமாறு ஆர்வலர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
இந்நிலையில், நாட்டில் ஆயுதப்படை தின விழாவுக்கு ஏற்பாடு செய்துள்ள இராணுவ ஆட்சி குழு, போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களது தலையில் அல்லது பின்னால் சுடப்படுவார்கள் என்று நேரடியாக எச்சரித்துள்ளது.


