லண்டன் வீதியில் ஆடையின்றி சாதாரணமாக நடந்து சென்ற நபரால் பரபரப்பு!
பிரித்தானிய நகரம் லண்டனில் நபர் ஒருவர் உடலில் எந்த ஆடையுமின்றி பேக்குடன் நடந்து சென்றது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் உலா வருகின்றன.
கையில் காபியுடன் ஆடையின்றி நடந்த நபர்
லண்டனின் ஓல்டு பெய்லிக்கு வெளியே நபர் ஒருவர் உடலில் ஆடைகள் இன்றி பேக் ஒன்றை மாட்டிக் கொண்டு, கையில் காபியுடன் வீதிகளில் நடந்து சென்றுள்ளார்.
இந்த வினோதமான காட்சியை பார்த்த மக்கள் சற்று பதற்றமடைந்ததாக கூறப்படுகிறது. அவ்வழியாக சென்ற மற்றொரு நபர் ஆடையின்றி உலா வந்த நபரை படம்பிடித்துள்ளார்.
அசாதாரண சம்பவம்
அத்துடன் ஆடையின்றி நடந்து செல்பவரை பார்த்தது தனது நாளை மகிழ்ச்சிகரமாக மாற்றியதாகவும், அசாதாரண சம்பவம் உடனடியாக தங்களை உற்சாகப்படுத்தியதாகவும் அவர் கூறினார்.
எனினும், ஒருபுறம் இந்தக் காட்சியை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தாலும், பிறகு தன்னுடன் பேரக்குழந்தைகள் இருந்திருந்தால் என்ன செய்வது என்று ஒரு கணம் சிந்தித்ததாகவும் தெரிவித்தார்.
பாலியல் சூழல் அல்லது எச்சரிக்கை, துயரத்தை ஏற்படுத்தும் நோக்கம் கொண்டதாக இல்லையெனில், இங்கிலாந்தில் பொது நிர்வாணம் என்பது சட்டவிரோதமானது அல்ல என்று Crown Prosecution Serviceயின் கூற்றுப்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |