நேபாளத்தில் பேருந்து விபத்து., 2 இந்தியர்கள் உட்பட 12 பேர் பலி
இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் பேருந்து விபத்துக்கு உள்ளானதில் 2 இந்தியர்கள் உட்பட 12 பேர் உயிரிழந்தனர்.
நேபாளத்தில் பயங்கர விபத்து நடந்தது. மத்திய மேற்கு நேபாளத்தின் டாங் மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் இரண்டு இந்தியர்கள் உட்பட குறைந்தது 12 பேர் பலியாகியுள்ளதாக காவல்துறை உறுதி செய்துள்ளது.
வெள்ளிக்கிழமை இரவு பாலுபோங்கில் நடந்த இந்த விபத்தில் இறந்தவர்களில் எட்டு பேர் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று தெரியவந்துள்ளது.
kathmandupost
நேபாள கஞ்சிலிருந்து காத்மாண்டு நோக்கிச் சென்ற பயணிகள் பேருந்து ஒன்று ரப்தி ஆற்றின் மீதுள்ள பாலத்தில் இருந்து ஆற்றில் விழுந்தது.
இந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்ததாகவும், 22 பயணிகள் காயமடைந்ததாகவும் பாலுபோங் பகுதியின் தலைமை ஆய்வாளர் உஜ்வல் பகதூர் சிங் தெரிவித்தார்.
எனினும் உயிரிழந்தவர்களில் இருவர் இந்தியர்கள் எனவும் மேலும் 8 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்கள் இந்தியாவின் பீகார் மாநிலத்தில் உள்ள மலாஹியை சேர்ந்த யோகேந்திர ராம் (67) மற்றும் உத்தரபிரதேசத்தை சேர்ந்த முனே (31) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
"இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக லமாஹி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளன" என்று தலைமை ஆய்வாளர் கூறினார். எனினும், இந்த விபத்துக்கான காரணங்கள் இன்னும் தெரியவில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Nepal bus fell into Rapti River, Indians in Nepal