நேபாளத்தில் கடும் வெள்ளப்பெருக்கு: 8 பேர் பலி, 384 பேரை காணவில்லை
நேபாளத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் சிக்கி 8 பேர் வரை இதுவரை உயிரிழந்துள்ளனர்.
நேபாளத்தில் வெள்ளப்பெருக்கு
திபெத் எல்லையில் இருந்து வந்த திடீர் மற்றும் கடுமையான வெள்ளப்பெருக்கு வடக்கு நேபாள பகுதிகளை தீவிரமாக உலுக்கியுள்ளது.
போட்டே கோஷி(Bhote Koshi) நதியில் ஏற்பட்ட இந்த திடீர் வெள்ளத்தில் நுவாகோட் மற்றும் தாதிங் மாவட்டங்கள் பலத்த சேதமடைந்துள்ளன.
இந்த வெள்ளப்பெருக்கு சம்பவத்தில் இதுவரை குறைந்தது 8 பேர் வரை உயிரிழந்துள்ளனர். பலர் காணாமல் போய் உள்ளனர்.

நேபாள சுற்றுலா வாரியம் வழங்கிய தகவல்படி, 291 வெளிநாட்டினர் மற்றும் 93 உள்நாட்டு மக்கள் என மொத்தம் 384 பேர் இதுவரை காணாமல் போயுள்ளனர்.
மாயமான சுற்றுலா பயணிகளில் 105 பேர் இந்தியர்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
ராசுவா மாவட்டத்தில் நேபாள காவல்துறையை சேர்ந்த 26 அதிகாரிகளும், 7 ஆயுதப்படை வீரர்களும் இந்த வெள்ளப்பெருக்கில் காணாமல் போயுள்ளனர்.
இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் நேபாள ராணுவம், பேரிடர் மீட்புப் படைகள் ஆகியவை முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர். ஹெலிகாப்டர் மூலமும் மீட்புப் பணிகளானது தீவிரமாக நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வெள்ளம் காரணமாக ராசுவகதி, சிலிமே, திரிசூலி ஆகிய துணை மின் நிலையங்கள் மற்றும் ஆறு முக்கிய மின் உற்பத்தி நிலையங்கள் இதில் சேதமடைந்து இருப்பதாக நேபாள மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |